இந்தியா – பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரத்தில் மருத்துவமனை உரிமத்தை ரத்துசெய்த உச்சநீதிமன்றம்
பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனையின் உரிமத்தை உடனடியாக ரத்துசெய்யக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.4 லட்சத்திற்கு கடத்தப்பட்ட குழந்தை விற்கப்பட்டது.இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. குழந்தை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் முன்கூட்டியே பிணை வழங்கிய நிலையில், அதை உச்சநீதிமன்றம் ரத்துசெய்தது.மேலும், அதிகாரிகளின் கருணையற்ற அணுகுமுறையையும் கண்டித்தது. குழந்தை கடத்தல் வழக்கை மோசமாகக் கையாண்டதாகக் […]