உலகம்

கானாவில் ஹெலிகாப்டர் விபத்து – இரு அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

  • August 7, 2025
  • 0 Comments

கானா நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர் நொறுங்கியதில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் முக்கிய அரசியல் தலைவர்களும் அடங்குவர். அவர்கள் Z9 விமானப்படை ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். ஹெலிகாப்டரின் ரேடார் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மாண்டோரின் குடும்பத்திற்குக் கானாவின் அரசாங்கம் இரங்கல் தெரிவித்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

வாழ்வியல்

எந்த திசையில் தலைவைத்து தூங்குவது நல்லது? மருத்துவர்கள் விளக்கம்

  • August 7, 2025
  • 0 Comments

பொதுவாக தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும்தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்பவெப்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை மட்டும்தான் தூங்குவதற்கு ஏற்ற காலம் என்றும் கூறுகிறார்கள். இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர்கள் கூறியதை தெரிந்து கொள்வோம்.இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் அச்சுறுத்தும் வைரஸ் – 300 டொலரில் விற்பனையாகும் தடுப்பூசி

  • August 7, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 120,000 சுவாச வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 300 டொலர் செலவாகும் RSV தடுப்பூசியை இலவசமாக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய்களுக்கான தாய்வழி சுகாதார இயக்குனர் பேராசிரியர் பால் கிரிபின், அறிகுறிகள் கடுமையாக இருக்கலாம் என்றும், வைரஸால் பாதிக்கப்பட்ட சில பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார். அறிகுறிகளில் தலைவலி, […]

இந்தியா

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரம்

  • August 7, 2025
  • 0 Comments

பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அளித்த தகவல்களுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 02 வரை பயங்கரவாதிகள் அல்லது சமூக விரோத சக்திகளிடமிருந்து சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்புப் படையினரை அதிக எச்சரிக்கையுடன் வைக்க இந்திய சிவில் விமானப் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களின் கணக்குகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • August 7, 2025
  • 0 Comments

டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் இந்நேரத்தில், வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பயனர்கள் சந்தேகத்திற்குரிய அல்லது அறிமுகமில்லாத குழுக்களில் இணைவதைத் தவிர்க்கலாம். Safety Overview என்றால் என்ன? ‘சேஃப்டி ஓவர்வியூ’ என்றழைக்கப்படும் இந்த அம்சம், உங்களின் தொடர்பில் இல்லாத ஒருவர் உங்களை குழுவில் சேர்க்கும்போது தோன்றும். இது மோசடி செய்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் உத்தி. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அம்சம், குழு அழைப்புகளைத் தொந்தரவில்லாமல் மேலும் வெளிப்படையாக மாற்றும். உங்களை புதிய நபர் […]

விளையாட்டு

உங்களுக்கு உதவுவதற்காக இந்தியா வரவில்லை – கடும் கோபத்தில் சச்சின் டெண்டுல்கர்!

  • August 7, 2025
  • 0 Comments

இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 4-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முன்கூட்டியே டிரா அறிவிக்க கைக்குலுக்க முன்வந்தபோது, இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அதை மறுத்து, தங்கள் சதங்களை அடித்து முடித்தனர். இந்த சம்பவம், கிரிக்கெட்டின் ‘ஆவி’ (Spirit of Cricket) மீறப்பட்டதாக சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஜடேஜா மற்றும் வாஷிங்டனின் முடிவை ஆதரித்து, ஸ்டோக்ஸின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். […]

இன்றைய முக்கிய செய்திகள்

அமெரிக்கா – பாகிஸ்தான் நெருக்கம் – சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ட்ரம்ப்பின் நகர்வு

  • August 7, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர், பாகிஸ்தானுடன் உள்ள நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உலக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளன. சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவிகளை பாகிஸ்தான் எளிதாகப் பெறும் வகையில், அமெரிக்கா திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த உதவுவோம் என டிரம்ப் ஆட்சியாளர்கள் கூறியதும், இந்த நெருக்கம் மீதான சந்தேகங்களைத் தூண்டியுள்ளது. இதற்கெல்லாம் சிகரமாக, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீர் வெள்ளை மாளிகைக்கு […]

இலங்கை

இலங்கை வெப்பநிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

  • August 7, 2025
  • 0 Comments

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்றைய தினம், எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரை பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில அதிக கவனம் […]

வட அமெரிக்கா

கனடாவில் வானத்திலிருந்து விழுந்த மீனால் பற்றி எரிந்த காடுகள் – வெளியான அதிர்ச்சி தகவல்

  • August 7, 2025
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் Ashcroft நகரில், வானத்திலிருந்து மீன் விழுந்ததில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒஸ்பிரே ரகப் பறவை ஒரு மீனைக் கவ்வியபடி பறந்து சென்ற போது அந்த மீனை அது தவறவிட்டு கீழே விழுந்ததில் அது நேராக மின்கம்பியின் மீது விழுந்துவிட்டது. இதன் காரணமாக மின்கம்பியில் தீ பிடித்து, சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடையையும் ஏற்படுத்தியது. தீயணைப்பு துறையினர் தீயின் காரணத்தை விசாரித்தபோது, இந்த அபூர்வமான காரணம் கண்டறியப்பட்டதில் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த […]

செய்தி வட அமெரிக்கா

5 மாதங்களில் 5 போர்களை நிறுத்திவிட்டதாக டிரம்ப் மீண்டும் தம்பட்டம்

  • August 7, 2025
  • 0 Comments

கடந்த 5 மாதங்களில் 5 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பெருமிதமாக தெரிவித்துள்ளார். இதில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போதும் அடங்குவதாக கூறியுள்ளார். இந்தியா, பாக் சண்டையை தலையிட்டு நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் கூறினார். பலமுறை இதுபோன்ற அறிவிப்பை டிரம்ப் வெளியிட மத்திய அரசு தரப்பில் அதற்கும் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் கடந்த 5 மாதங்களில் 5 போர்களை நான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். அவர் […]

Skip to content