மனிதர்கள் உட்கொள்ளும் நுண்நெகிழி துகள்கள்
மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்கள், குடிக்கும் பானங்கள் மற்றும் சுவாசிக்கும் காற்றின் வழியாக நுண் நெகிழித் துகள்களை நுகர்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் சாசரியாக ஒரு ஆண்டுக்கு 78 ஆயிரம் முதல் இரண்டு லட்சத்து பதினோராயிரம் நுண்நெகிழித் துகள்களை உட்கொள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இதயநோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீரின் மூலமாகவே மனிதர்கள் அதிக அளவிலான நுண்நெகிழித் துகள்களை உட்கொள்வதாகக் கூறப்படுகிறது. […]