இந்தியா- பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஐவர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின், ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிங்கேவாலா கிராமத்தில் வியாழக்கிழமை (மே 29) நள்ளிரவில் நிகழ்ந்தது. விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் புலம்பெயர் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு ஏறக்குறைய ஒரு மணியளவில் அந்தப் பட்டாசு ஆலையில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து, ஆலை முழுவதும் மளமளவென தீ பரவியது. பின்னர் […]