செய்தி

அரசுத் துறை பயன்பாட்டிற்கு மட்டுமே மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன – மனுஷ நாணயக்கார

  • April 12, 2023
  • 0 Comments

ரச துறையின் பயன்பாட்டிற்கு மாத்திரம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஓவர்லேண்ட் ஆட்டோமொபைல் இன்ஸ்டிடியூட் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்ற அவர், 2023 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நாட்டை மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எந்த கொள்கை முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு டாலர்களை அனுப்பவில்லை, ஏனெனில் அவர்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை […]

இலங்கை செய்தி

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் உரிமையாளர்களுக்கு விநியோகிக்கும் பணி ஆரம்பம்

  • April 12, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி உரிமையாளர்களுக்கு விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் (STC) தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரி உரிமையாளர்களுக்கு ரூ.1 வீதம் வழங்கப்படும் என எஸ்டிசியின் பேச்சாளர் தெரிவித்தார். முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அறிவித்துள்ள முட்டைகளுக்கு சில விற்பனையாளர்கள் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபையும் (CAA) சோதனைகளை ஆரம்பித்துள்ளது. சிஏஏ […]

இலங்கை செய்தி

மார்ச்ச மாதத்தில் பெருமளவு சுற்றுலா பயணிகள் வருகை

  • April 12, 2023
  • 0 Comments

மார்ச் மாதத்தின், முதல் 26 நாட்களில்  இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய இந்த ஆண்டின் முதல் காலாண்டில்  3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 714 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் ரஷ்யாவிலிருந்து 22 ஆயிரத்து 38 பேரும், இந்தியாவிலிருந்து 15 ஆயிரத்து 695 பேரும்,  பிரித்தானியாவில் இருந்து 8 ஆயிரத்து 555 பேரும்,  ஜேர்மனியில் […]

இலங்கை செய்தி

எதிர்காலத்தில் ரணில், ராஜபக்ஷக்கள் இணைந்து செயற்படலாம் – எஸ்.பி. திஸாநாயக்க!

  • April 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்கால அரசியலில் ரணில்,  ராஜபக்ஷர்கள் ஒன்றிணைந்து செயற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல பகுதியில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒருசில தவறான தீர்மானங்கள் பொருளாதார  பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடி […]

இலங்கை செய்தி

நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்கு அருகில் போராட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்கு அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று(29) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் குறித்த  போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையையடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றின் செயற்பாட்டை கண்டித்தும் வெடியரசன் கோட்டை தமிழரின் […]

இலங்கை செய்தி

தொழிநுட்பத்தின் அதிநவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி தெரிவிப்

  • April 12, 2023
  • 0 Comments

IMF உதவியுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் பழைய முறையை பின்பற்றுவதா அல்லது  புதிய முறையின் ஊடாக வளர்ந்து வரும் உலகத்துடன் முன்னோக்கிச்  செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என கொழும்பு ஆனந்த கல்லூரியில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் 2048 ஆம் ஆண்டாகும் போது  நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும்   நம் நாட்டு மாணவர்கள் பெற வேண்டும் எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

  • April 12, 2023
  • 0 Comments

சம்பத் வங்கியின் கூற்றுப்படி நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. கொள்வனவு பெறுமதி ரூ. 318 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 333 அதிகரித்துள்ளது. கொமர்ஷல் வங்கியில்,  அமெரிக்க டாலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 315 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 332.50 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .  

இலங்கை செய்தி

விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்ததாக வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். அங்கு செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினருக்கு மாத்திரமே அனுமதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதியிடம் தொலைபேசி மூலமாக முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் பௌத்தத்தை பாதுகாக்க விசேட கூட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்றுவிசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த […]

இலங்கை செய்தி

திருகோணமலை சம்பூரில் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை மின்சாரசபை மற்றும் இந்திய தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபன கூட்டு வர்த்தகக் கம்பனியால் திருகோணமலை சம்பூரில் அமைந்துள்ள சூரிய மின்னுற்பத்தி நிலையத்தைத் தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த  இடத்திலேயே 135 மெகாவோல்ட் சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை 2 படிமுறைகளாக ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபன கூட்டு வர்த்தகக் கம்பனிக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் 1 […]

Skip to content