செய்தி தமிழ்நாடு

சிலிண்டர் விலை உயர்வு பெண்கள் ஒப்பாரி

  • April 14, 2023
  • 0 Comments

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு  சமையல் எரிவாயு சிலிண்டர்  விலை ரூ.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு .1,103-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அதேபோல, வணிக பயன்பாட்டு சிலிண்டரின்  விலை  350 ரூபாய் அதிகரிக்கப்பட்டு  2,119.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள்  நடத்தி வருகின்றன. […]

ஐரோப்பா செய்தி

போட்டியில் பங்கேற்ற நாய்களுக்கு விஷம் கலந்த உணவு: பிரான்ஸில் அனைவர் மனதை கலங்க வைத்த சம்பவம்

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி ஒன்றில், தங்கள் உரிமையாளர்களுடன் கலந்துகொண்ட வளர்ப்பு நாய்களுக்கு விஷம் வைக்கப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Canicross என்பது நாடுகளுக்கிடையே நாய்களுடன் அவற்றின் உரிமையாளர்கள் ஓடும் ஒரு பந்தயமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரான்சுக்கு தெற்காக அமைந்துள்ள Vauvert நகரில், நாய்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.அப்போது, வழியில் கிடந்த மீட் பால்ஸ் என்னும் மாமிச உணவை நாய்கள் சாப்பிட்டுள்ளன. சாப்பிட்ட 15 நிமிடத்தில் மூன்று நாய்கள் உயிரிழந்துவிட்டன, நான்காவது நாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு […]

செய்தி தமிழ்நாடு

சென்னை விமான நிலைய புதிய முனையம் பிரதமர் மோடியால் திறந்துவைப்பு!

  • April 14, 2023
  • 0 Comments

சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாயில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த புதிய முனையத்தின், கீழ் தளத்தில், பயணிகளின் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரைதளத்தில் சர்வதேச வருகை பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகள் செயல்படுத்தப்படும். 2ஆவது தளத்தில், பயணிகளுக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. […]

ஐரோப்பா செய்தி

வீட்டுக்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு.,உயிர் தப்பிய சிறுமி – பிரான்ஸில் அரங்கேறிய சம்பவம்!

  • April 14, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதியில் எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் சிறுமி ஒருவர் உயிர் தப்பியுள்ளார். La Courneuve என்ற உள்ள வீடொன்றுக்குள் திடீரென பாய்ந்த துப்பாக்கி ரவையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிஷ்ட்டவசமாக சிறுமி ஒருவர் காயமின்றி உயிர்பிழைத்துள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இங்குள்ள வீடொன்றின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டுக்குள் பாய்ந்துள்ளது. அங்கு வசிக்கும் சிறுமி ஒருவரது கட்டிலில் சென்று குறித்த ரவை துளைத்துக்கொண்டு நின்றது. கட்டிலை […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் முழுவதும் புயல், சூறாவளி வீசியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் வீசிய சக்திவாய்ந்த புயல் மற்றும் சூறாவளி காரணமாக குறைந்தது 23 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு ஏற்பட்ட சூறாவளி காரணமாக 23 பேர் இறந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை  நான்கு பேர் காணவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று மிசிசிப்பி அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த எண்ணிக்கை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனர்த்தத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில்,  ஏராளமான உள்ளூர் மற்றும் மாநில […]

செய்தி தமிழ்நாடு

பாதிரியாரின் ஆபாச படங்கள் காவல்துறையிடம் சமர்ப்பித்தனர்

  • April 14, 2023
  • 0 Comments

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த இவருக்கும் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவனான ஆஸ்டின் ஜியோ என்பவருக்கும் இடையே  பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் பேரில் பெனிடிக் ஆண்டோ கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின் பேரில்  போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் […]

செய்தி தமிழ்நாடு

11 கடைகளுக்கு சீல்

  • April 14, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட தாமரைக் குளம் சாலையில் அமைந்துள்ள அதே பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவருக்கு சொந்தமான தனியார் வணிக வளாகத்திற்க்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சொத்து வரி  செலுத்தாமல் காலதாமதம் செய்துவந்த நிலையில் அச்சிறுப்பாக்கம் பேருராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் சொத்துவரி பாக்கி செலுத்தாததால் வணிக வளாக 11 கடைகளுக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரைப்படி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உத்தரவுப்படி பேரூராட்சி அதிகாரிகள் இன்று […]

செய்தி தமிழ்நாடு

இந்தியாவில் வேகமாக பரவும் இன்புளுயன்சா வைரஸ் : புதிய சுகாதார வழிக்காட்டல் வெளியீடு!

  • April 14, 2023
  • 0 Comments

தமிழகம் முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 3 வகையான இந்த வைரசால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த வைரசை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தமிழக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அந்தவகையில் இந்த வகை வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதையும், குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும். […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை கடந்த 24ம் திகதி இரவு கடுமையான சூறாவளி சூறையாடியது. மணிக்கு சுமார் 320 கிமீ வரை வீசிய சூறாவளியால் கர்ரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலரும் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த சூறாவளியால் பல வீடுகள், வணிக வளாகங்கள் தரைமட்டமாகின. மிசிசிபி மாகாணத்தில் சூறாவளிக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். தற்போது அங்கு மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்து […]

செய்தி தமிழ்நாடு

2,600 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்றது தமிழ் சமூகம்

  • April 14, 2023
  • 0 Comments

மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 7 நாட்கள் நடைபெறும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர், நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசுகையில் எனது தாய்மொழி மலையாளம், ஆனால் நான் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன், தமிழ்நாட்டில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த வரப்பிரசாதம், இளந்தமிழர் […]

Skip to content