இலங்கை

பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக காணிகளை விற்க வேண்டாம் – சித்தார்த்தன்!

  • May 8, 2023
  • 0 Comments

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன. […]

இலங்கை

தலைக்கவசத்தால் நண்பனை தாக்கி கொலை செய்த நபர்

  • May 8, 2023
  • 0 Comments

மினுவாங்கொடையில் நண்பனை தலைக்கவசத்தால் தாக்கி நேற்று (7) கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு அந் நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தினாலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொரம்பெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அஸ்வென்ன வத்த பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

இலங்கை மீனவர்களுக்கு வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 8, 2023
  • 0 Comments

வடக்கு,  கிழக்கு ஆகிய கடல் எல்லை பகுதிக்குள் காற்றின் வேகம் பலமாக காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,  மத்திய,  வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. அத்துடன் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும், மத்திய மலைநாட்டின் […]

ஐரோப்பா

ஜேர்மனில் காடு ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நபர்; பெண் ஒருவரைத் தேடி வரும் பொலிஸார்

  • May 8, 2023
  • 0 Comments

ஜேர்மனியிலுள்ள காடு ஒன்றில், கட்டிவைக்கப்பட்ட நிலையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில் விபரீத உண்மை ஒன்று தெரியவந்தது. ஜேர்மனியிலுள்ள Bueckburg நகரிலுள்ள காட்டுப்பகுதி வழியே சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரும், வேட்டைக்காரர் ஒருவரும், காட்டுக்குள்ளிருந்து ஒரு ஆண் சத்தமிடுவதைக் கேட்டு பொலிஸாருக்கு தகவலளித்துள்ளனர். உடனடியாக பொலிஸார் அங்கு விரைய, வேட்டையாட வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் ஒரு மேடையில், ஆண் ஒருவர், பெண்கள் அணியும் ஸ்டாக்கிங்ஸ் மற்றும் கயிற்றால் கட்டிவைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுள்ளனர். என்ன நடந்தது என அவரிடம் பொலிஸார் விசாரிக்கும்போது, […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் மா மற்றும் சீனியின் விலை அதிகரிப்பு!

  • May 8, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா, மற்றும் சீனிக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மா, மற்றும் சீனிக்கான சுங்க வரி சலுகை நீக்கப்பட்டுள்ளதால், அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல், அமுலாகும் வகையில்,   ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,  கோதுமை மாவுக்கு 3 […]

ஆஸ்திரேலியா

வீடு சுத்தம் செய்யும் கருவிக்குள் புகுந்த பாம்பு; கணவர் எடுத்த உடனடி முடிவு

  • May 8, 2023
  • 0 Comments

ஆஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் மனைவி ஒருவர் விச பாம்பு ஒன்றை சுத்தம் செய்யும் கருவி கொண்டு பிடித்ததை தொடர்ந்து, அவரது கணவர் உடனடியாக அவசர கால உதவி குழுவுக்கு அழைப்பு விடுத்தார். குயின்ஸ்லாந்தின் ஹெர்வி பே பகுதியில் உள்ள விடுமுறை தின விடுதியில் சுற்றுலாவுக்கு வந்த பெண் ஒருவர் தரையை சுத்தம் செய்யும் கருவியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது அதில் சிறிய மஞ்சள் தலை சாரை பாம்பு ஒன்று சிக்கியது.இதை தொடர்ந்து ஹெர்வி பே-வில் உள்ள […]

mahinda rajapakse இலங்கை

ராஜபக்ஷக்களுக்கு எதிரான மனு ஜுலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது!

  • May 8, 2023
  • 0 Comments

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும்  பசில் ராஜபக்க்ஷ ஆகியோருக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த மனு  இன்று  (08) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு […]

உலகம்

அமெரிக்காவில் முறைகேடு குறித்து தகவல் வழங்கியவருக்கு 279 மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டது!

  • May 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் முறைகேடு ஒன்று தொடர்பாக தகவல் அளித்த ஒருவருக்கு 279 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை  அமெரிக்காவின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கமைப்பாளர்,  இந்த ஆணைக்குழுவின் வரலாற்றில் அளிக்கப்பட்ட மிகப் பெரிய சன்மானம் இதுவாகும் எனத் தெரிவித்தார். இதற்கு முன்னர் இதுபோன்று ஊழலை அம்பலப்படுத்தியமைக்காக ஒருவருக்கு  ஆகக்கூடுதலான வெகுமதியாக 114 மில்லியன் டொலர்கள் 2020 ஒக்டோபரில் வழங்ப்பட்டிருந்தன. அத்தொகையைவிட இரு மடங்குக்கும் அதிகமான வெகுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. […]

செய்தி தமிழ்நாடு

ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

  • May 8, 2023
  • 0 Comments

கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வில், காவல்துறையினர் கலவரக்காரர்கள் போல செயல்பட்டனர். இதில் அவர்களை நோக்கி டிரோன் […]

வட அமெரிக்கா

உக்ரைனை அடுத்து இன்னொரு நாட்டுக்கு ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்கா

  • May 8, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு ஆயுத உதவிகளை தொடர்ந்து அளித்துவரும் அமெரிக்கா தற்போது அதே அவசர கால உதவியாக தைவானுக்கும் ஆயுதங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கிய பின்னர் இதுவரை 35 முறை அமெரிக்கா ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளது இந்த நிலையில், 2023 நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக, தைவானுக்கு 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளிக்க காங்கிரஸ் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது […]

Skip to content