இலங்கை

பாடசாலை மாணவியின் குடிநீர் போத்தலுக்குள் கலந்திருந்த சிறுநீர்!

  • May 12, 2023
  • 0 Comments

கிளிநொச்சியில் முன்னணி கலவன் பாடசாலையொன்றில் கல்விகற்கும் மாணவியின் குடிநீர்ப் போத்தலில் சிறுநீர் கலந்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், கடந்த 9ஆம் திகதி நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சிறுநீர் கலந்திருப்பதை அறியாத மாணவி அதனை பருகியுள்ளார். நீரை பருகிய போது அதில் வித்தியாசத்தை உணர்ந்த மாணவி சந்தேகமடைந்து, குடிநீர் போத்தலை ஆசிரியையிடம் கொண்டு சென்று காட்டியுள்ளார். தனது குடிநீரின் நிறம் மாறியுள்ளதுடன், குடிநீர் அளவும் அதிகரித்திருந்ததாக மாணவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஆசியை குடிநீரை […]

இந்தியா

ரோட்டில் நின்ற பைக்கிலிருந்து பெட்ரோலை திருடி அதே பைக்கிற்கு தீ வைத்த பெண்!(வீடியோ)

  • May 12, 2023
  • 0 Comments

டெல்லியில் பெண் ஒருவர் பைக்கில் இருந்து பெட்ரோலை வெளியேடுத்து, அந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியின் தென்கிழக்கு மாவட்டமான ஜெய்த்பூரில், பெண் ஒருவர் ரோடுடில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்றில் இருந்து பெட்ரோலை வெளியே எடுத்து, அதே வாகனத்தை தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே பெண் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு வாகனத்தை தீயிட்டு கொளுத்த முற்பட்ட போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது […]

ஐரோப்பா

ரஷ்ய அதிபரின் பெற்றோருடைய புதைக்குழியை இழிவுப்படுத்திய பெண் கைது!

  • May 12, 2023
  • 0 Comments

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெற்றோரின் புதைகுழிவுகளை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ரஸ்ய ஜனாதிபதியின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் ஒரு அசுரனையும் ஒரு கொலைகாரனையும் வளர்த்தவர்கள் என குறிப்பொன்றை வைத்துவிட்டு சென்ற 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. செயின்பீட்டர்ஸ்பேர்க்கை சேர்ந்த இரினா சைபனேவா என்ற 60 வயது பெண்ணிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. அரசியல் குரோததன்மையால் அவர் இதனை […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூத்த தளபதிகள் ஐவர் பலி

  • May 12, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, ஹமாஸ் போன்று இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் பல ஆயுத குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு […]

இலங்கை

நியூ டைமண்ட் கப்பலை விடுவிக்க உத்தரவிட்டது யார் : சந்திம வீரக்கொடி கேள்வி!

  • May 12, 2023
  • 0 Comments

இலங்கை கடலில் விபத்துக்கு உள்ளான நியூ டைமண்ட் கப்பலை விடுவிக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சேர்ந்த சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற,  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் எமது கடல்சார் சுற்றாடலுக்கு […]

ஆசியா

பாகிஸ்தானில் எதிர்க்கட்சி முக்கிய தலைவர்கள் அதிரடி கைது!

  • May 12, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் அடங்கும். இதனிடையே, ஊழல் வழக்கு தொடர்பாக இம்ரான்கான் கடந்த 10ம் திகதி லாகூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இம்ரான்கானை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான்கானை 8 நாட்களில் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தனக்கு விதிக்கப்பட்ட […]

இலங்கை

கண்ணில் சிலந்தி கூடுகட்டுவதை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது – கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்!

  • May 12, 2023
  • 0 Comments

கண்புரை சத்திர சிகிச்சையின் போது தமது கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கண்களிற்கும் உயிருக்கும் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளிற்காக இழப்பீடுகளை கோரியுள்ளனர். பண்டாரவளையை சேர்ந்த 67 வயது பீ.ஏ.நந்தசேன என்பவர்,  நுவரேலியா மருத்துவமனையில் கண்புரைசத்திர கிசிச்சையின் போது பாதிக்கப்பட்டார். ஏப்பிரல் நான்காம் திகதி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஐந்தாம் திகதி சத்திரகிகிச்சை இடம்பெற்றது. அன்றே குறிப்பிட்ட மருந்தினை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆறாம் திகதி நான் மருத்துவ மனையிலிருந்து வெளியேறினேன் என அவர் தெரிவித்துள்ளார். 14 நாட்களின் பின்னரே நான் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அமுலுக்கு வந்த கடுமையான புதிய சட்டம்

  • May 12, 2023
  • 0 Comments

அமெரிக்க எல்லையில் அமுலில் இருந்த விதி 42 என்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய கடுமையான சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய புகலிட விதிகள் சட்டவிரோதமாக கடக்க முன்னெடுக்கும் முயற்சிகளை தடுக்கும் என்றே நம்பப்படுகிறது. மெக்சிகோ எல்லையில் பல புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்திய கொரோனா கால எல்லைக் கட்டுப்பாடு விதிகளை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.அத்துடன் புதிய கடுமையான விதிகளை அமுலுக்கும் கொண்டுவந்துள்ளது. இதனால் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் எவரும் நீண்ட கால தடை மற்றும் சாத்தியமான குற்றவியல் […]

வாழ்வியல்

தலை முடிக்கு டை பயன்படுத்துபவரா நீங்கள்? அவதானம்

  • May 12, 2023
  • 0 Comments

தலை முடிக்கு டை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று பலருக்கு இளம் வயதிலேயே நரை முடி ஏற்படுவதுண்டு. இதனை மறைப்பதற்காக பலரும் ஹேர் டை பயன்படுத்துவதுண்டு. நாம் பயன்படுத்து ஹேர் டையில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல்கள் கலந்திருப்பர். தற்போது இந்த பதிவில் நாம் இப்படிப்பட்ட ஹேர் டையை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். பிரச்சனைகள் இந்த கெமிக்கல் கலந்த ஹேர் டையை பயன்படுத்துவதால் ஒவ்வாமை […]

இலங்கை

இலங்கையில் நடந்த சோகம் – சுற்றுலா சென்ற இளம் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்

  • May 12, 2023
  • 0 Comments

கொஸ்லந்த, தில்லும நீர்வீழ்ச்சிக்கு அருகில் முகாமிட்டிருந்த இளம் தம்பதியரை காட்டு யானை தாக்கியதில் யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளளார். இன்று (12) அதிகாலை இந்த சம்வபவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தறை கெகுனதொர பிரதேசத்தில் வசித்து வந்த 23 வயதுடைய ஜி தருக்க்ஷி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். வாரியபொல பகுதியைச் சேர்ந்த கே.ஏ. தனுஷ்க (22) என்பவரே காயமடைந்துள்ளார். இவர்கள் கொஸ்லந்தவில் உள்ள தியலும பகுதிக்கு சுற்றுலா வந்து […]

Skip to content