இலங்கை

உயர் அதிகாரிகள் இருவருக்கு மாநாட்டுக்கு செல்வதற்கான அனுமதி மறுப்பு!

கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு மாநாட்டுக்காக செல்வதற்கு, தமது அமைச்சின் கீழ்வரும் நிறுவனமொன்றின் உயர் அதிகாரிகள் இருவருக்கு இலங்கையின் நிதி அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. அரச தலைவர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் காரணமாக இந்தப் பயணத்தை அங்கீகரிக்க முடியாது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் வணிக வகுப்பில் அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கான விமான அனுமதிச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு அரச நிதியை வெளியிட முடியாது என்பதையும் அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது. எனினும், குறித்த அதிகாரிகள் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு […]

Tamil actress Nivedhithaa Sathish புகைப்பட தொகுப்பு

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்பட நடிகை நிவேதிதா சதீஷின் அழகிய புகைப்படங்கள்

  • June 11, 2023
  • 0 Comments

Credit: Insta/Nivedhithaa Sathish Nivedhithaa Sathish Instagram posts நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் View this post on Instagram A post shared by Nivedhithaa Sathish (@nivedhithaa_sathish)

உலகம்

உக்ரைன் தாக்குதல் தொடர்பில் இரகசியம் காக்கும் ஜெலென்ஸ்கி..!

உக்ரைனில் படையெடுக்கும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர் தாக்குதல் நடவடிக்கைகளை உக்ரைன் படைகள் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அது தொடர்பான எவ்வித தகவல்களையும் வெளிப்படையாக வழங்க முடியாது எனவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார். மேலும், “உக்ரைனின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் ஐந்து பேருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றேன்” எனவும் ஜெலென்ஸ்கி இதன்போது தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைனின் தெற்கு […]

இலங்கை

பிரபல ஐஸ் போதை வியாபாரி காத்தான்குடியில் கைது

காத்தான்குடியில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பிரபல ஐஸ் போதை வியாபாரியொருவர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார். அவர் இக் கைது சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், “கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் காத்தான்குடி டீன் வீதி, ஜவ்பர் ஆலிம் வீதியில் குறித்த வியாபாரி ஐஸ் போதை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5850 மில்லி கிராம் […]

உலகம்

கடும்காட்டுத் தீ தொடரும் மரணங்கள்- கஜகஸ்தானில் துயரம்

கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயின் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளில் காட்டுத்தீயினால் அதிக மரணம் ஏற்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் அபை மாகாணத்தில் உள்ள பட்யபவப்ஸ்கை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயினால் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. வேகமாக பரவிவரும் தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள், இராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் என 1,000 க்கும் மேற்பட்டோர் […]

இலங்கை

கொழும்பில் பெண் ஒருவர் மீது சரிமாரியான வாள் வெட்டு தாக்குதல்!

மாளிகாவத்தை பகுதியிலுள்ள “லக்ஹிரு செவன” அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். பாத்திமா ரிஸ்வான் என்ற 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவம் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். “என் சகோதரி வெட்டப்பட்டார். மலிஷா என்ற நபரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த […]

இந்தியா

இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு! மத்திய வெளியுறவு அமைச்சகம்

கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மோசடியான ஆவணங்களைத் தயாரித்து இந்திய மாணவர்கள் சிலர், கனடா நாட்டின் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அவ்வாறு சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள கனடா நாட்டின் தூதரகம் மற்றும் கனடாவில் உள்ள இந்திய நாட்டு தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, கனடா நாட்டு […]

பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகர் புற்றுநோயால் மரணம்

பிரபல இந்தி திரைப்பட நடிகர் மங்கள் தில்லான் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். 1986ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘புனியாட்’ மற்றும் 1988ம் ஆண்டு ஒளிபரப்பான ‘கூன் பாரி மாங்’ ஆகிய தொடர்களின் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். 78 வயதான தில்லானுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தில்லான் […]

இலங்கை

லண்டன் – பிரான்ஸ் நோக்கி பயணமாகும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, தலைவர் பெரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரிஸ் கிளப் இலங்கையின் கடன் நெருக்கடி மற்றும் கடன் ஸ்திரப்படுத்தலுக்கு தனது ஆதரவை முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த விஜயத்தின் போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Skip to content