இலங்கை செய்தி

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது – பிரமித்த பண்டார தென்னகோன்!

  • April 12, 2023
  • 0 Comments

பொருளாதார மேம்பாட்டுக்கும்  மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் எனவும் பாதுகாப்பு இராஜாங்க […]

இலங்கை செய்தி

பொதுமக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வழிவகுக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் : முக்கியஸ்தர் எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மாறியிருக்கின்ற நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் சுமைகளை நலிந்தவர்கள், உழைக்கும் மக்கள்,  தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் பாரதூரமான […]

இலங்கை செய்தி

போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்கம் அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

எமது சாதாரண கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியுள்ளதால்  தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்  என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்ணாயக்க மேற்படி அறிவித்துள்ளது. எமது ஒன்றிணைந்த நீர்வழங்கல் தொழிற்சங்கம் 4ஆம் திகதி அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகிக்கொண்டோம். நிர்வாக சேவை அதிகாரிகளால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை வழங்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்ததோம். ஆனாலும் குறைந்த பட்சம் நீர்வழங்கல் […]

இலங்கை செய்தி

ரயிஸ் குக்கரால் சிறுமிக்கு விபரீதம் ;தந்தையை கைது செய்த பொலிஸார்!

  • April 12, 2023
  • 0 Comments

செயற்பட்டுக் கொண்டிருந்த ரைஸ் குக்கர் மூடியை 16 வயது மகளின் முகத்தில் வைத்து தந்தை எரித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிங்வத்த பொலிஸார் தெரிவித்தனர். பிங்வத்த வடுபாசல்வத்த பிரதேசத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி தன் தாயாருடன் வந்து  செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.முகத்தில் எரி காயத்துடன் வந்த பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயும் நேற்று (05) இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சிகிச்சைக்காக […]

இலங்கை செய்தி

நாட்டிற்காக அல்ல, பணத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைவர் – ஹர்ஷண ராஜகருணா

  • April 12, 2023
  • 0 Comments

எதிர்க்கட்சியிலிருந்து எவரேனும் அரசாங்கத்துடன் இணைவார்களாயின் அவர்களின் நோக்கம் பணமும்,  அமைச்சுப்பதவிகளுமே தவிர நாட்டின் அபிவிருத்தி அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஆளுந்தரப்பினர் கூறுவதைப் போன்று எதிர்க்கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை. அமைச்சுப்பதவியில் மோகமும்  200 மில்லியனை விரும்புபவர்களுமே அரசாங்கத்துடன் இணைவர் மாறாக எவரேனும் இணைவார்களாயின் அது 200 மில்லியன் […]

இலங்கை செய்தி

இலங்கையில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதா?

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்யப்படுவதாகவும், வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. எனினும் இந்த செய்திகள் வெறும் வதந்திகள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு, இதுபோன்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதோ, தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைப்பதோ அல்லது வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிப்பதோ இல்லை […]

இலங்கை செய்தி

இலங்கையில் உச்சம் கொடுக்கும் சூரியன் – நேரம் குறித்து அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென்கரையோரப் பிரதேசங்களில் […]

இலங்கை செய்தி

தனுஷ்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய சலுகை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 31 வயதான தனுஷ்க குணதிலக்க, இன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனை மாற்றத்துக்காக விண்ணப்பித்தார். அவர் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். தனுஷ்க குணதிலக்க, கடந்த 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – காதலனின் நண்பனால் சிறுமிக்கு நேர்ந்த கதி

  • April 12, 2023
  • 0 Comments

மொனராகலை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் அவருடைய காதலனின் நண்பனால் பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 17 வயதான சிறுமி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அந்த சிறுமி, தன்னுடைய காதலனின் வீட்டுக்கு கடந்த 3ஆம் திகதியன்று சென்றுள்ளார். அன்று, அவசர வேலை நிமித்தம் வீட்டை விட்டு காதலன் வெளியே சென்றிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த காதலனின் நண்பன், தனது நண்பன் தொடர்பில் விசாரித்துள்ளார். அவர் வெளியே சென்றுள்ளார் என சிறுமி கூற,  புகைப்பொருளை […]

இலங்கை செய்தி

இலங்கையில் மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் அரசியல்வாதிகள்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை அரசின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மாபெரும் கண்டனப் போராட்டத்தை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும் என உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தில் தஞ்சமடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசு, ‘இப்போது அரசு வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதே எமது முதல் கட்டளை எனக் கூறி நாட்டின் அனைத்து பொருளாதார நிலையங்களையும் விற்பனை செய்ய […]