அசாத் வீழ்ச்சிக்குப் பின்னர் சிரியாவில் மிக மோசமான கலவரத்தில் டஜன் கணக்கானோர் பலி
சிரியாவில் ராணுவப் படைகளுக்கும் முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாட்டின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 70க்கும் அதிகமானோர் பலியாயினர். முன்னாள் அதிபர் அஸாட்டின் ஆட்சி கடந்த டிசம்பர் மாதம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து மூண்ட கலவரங்களில் இதுவே ஆக மோசமானதாகக் கருதப்படுகிறது. லடாக்கியா, டார்டுஸ் ஆகிய கரையோர நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லட்டாக்கியா நகரில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசாங்க அதிகாரிகளைக் கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்ததை அடுத்து கலவரம் வெடித்தது. கைகலப்பு மூண்ட இடம் அஸாட் […]