இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – 10 வயது சிறுமிக்கு ஆசிரியர் செய்த செயல்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த  ​எஹலியகொட பொலிஸார், அந்த ஆசிரியருக்கு 46 வயதாகும் என்றனர். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் […]

இலங்கை

அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தவருக்கு சத்திரசிகிச்சை – பொலிஸில் முறைப்பாடு

  • April 10, 2023
  • 0 Comments

தனியார் வைத்தியசாலையொன்றில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையினால் விரைப்பை இழந்ததாக ஒருவர் கொம்பஞ்சாவீதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் விடுமுறைக்காக வந்திருந்த போது வயிற்றில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் தெரிவித்தபோதும், மருத்துவர் அதைப் புறக்கணித்து, சாதாரண நிலைதான் என்று […]

இலங்கை

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்புப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துகளுக்கு அமைவாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றிருந்தது. இக்கூட்டத்தில் ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றம், தமது நாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மற்றைய நாட்டுப்பிரஜையை நாடுகடத்துதல் மற்றும் […]

இலங்கை

இலங்கை IMF நிதிய உதவியைப்பெறும் செயன்முறைக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க சீனா இணக்கம்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கை கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். அதேபோல்  இந்த விடயத்தில்  நிதியியல் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இலங்கை முகங்கொடுத்திருக்கும் குறுங்காலக்கடன் மீள்செலுத்துகை நெருக்கடிக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகக் […]

இலங்கை

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் பேரவை

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்கத்தூதுவருக்கும் இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (சி.ஈ.ஓ) பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது தற்போது நிலவும் சவால்கள் குறித்தும், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அனைத்துத்தரப்பினரும் கூட்டிணைந்து உதவக்கூடிய புதிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.  

செய்தி

வீட்டிற்கு சிலிண்டர்களை சுமந்துவராததால் மாணவருக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை!

  • April 10, 2023
  • 0 Comments

இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை தனது வீட்டிற்கு சுமந்து வராமையினால் ஆசிரியர் ஒருவர் மாணவரை தாக்கிய சம்பவம் மாத்தளை நாவுல பகுதியில் பதிவாகியுள்ளது. பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார்.எனினும் மாணவர் ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுப்பு தெரிவித்ததுடன், ஆசிரியரால் மாணவர் தாக்கப்பட்டுள்ளார். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்ட நிலையில் அம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் […]

இலங்கை

பசில் ராஜபக்க்ஷ பற்றி உண்மையை உடைத்த சன்ன ஜயசுமண!

  • April 10, 2023
  • 0 Comments

பசில் ராஜபக்க்ஷ பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். தேசிய அமைப்பாளராக சபுமல் வலவ்வத்த என்ற நபர் பெயரிடப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆவணங்களில் அந்த நபரின் பெயர் இருப்பதாகவும் சன்ன ஜயசுமண குறிப்பிடுகின்றார். அதன்படி செயலாளர் சாகர காரியவசம் நாட்டுக்கு பொய் சொல்கிறார் எனவும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கட்சி யாப்பும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட கட்சி யாப்பும் வேறு […]

இலங்கை

உள்ளூராட்சிதேர்தல்கள் தாமதம் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி தேர்தல்கள் தாமதமாவது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் பேச்சாளர் இதன் காரணமாக விசாரணைகள்இடம்பெறும்என தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் விசார

இலங்கை

சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானம்!

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றன பின்னணியில் சர்வஜன வாக்குரிமை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் அவசியம் என பிரதான எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஒத்திவைப்டுபு விவாதம் நடைபெறவுள்ளது. குறித்த விவாதம் வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. பாராளுமன்ற அமர்வு வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 7ஆம் திகதி காலை 09.30 மணிமுதல் காலை 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 10.30 மணிமுதல் […]

இலங்கை

மாயா சிவஞானம் -வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல்

  • April 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். இதன்போது வடக்கின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்தத்திற்கு பின்னரான வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கங்களின் பங்களிப்புகள் மற்றும் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் வடக்கின் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

You cannot copy content of this page

Skip to content