இலங்கை

இலங்கையின் வரிக்கொள்கை தொடர்பில் வெளியான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையை மறுசீரமைப்பது இன்றியமையாத விடயம் என சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வரி வருவாய் மற்றும் செலவு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யவே அது தேவைப்படுவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிநபர் வருமான வரிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரி விகிதம் அதை அடைவதற்கு இன்றியமையாதது என்று சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் ஊடாக கடனாளிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை

யாழில் பெண் ஒருவரின் மோசமான செயல்

  • April 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் உரும்பிராய், பொக்கனைப் பகுதியில் பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவரது உடைமையில் இருந்து 6 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் பெண்ணொருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பெண்ணை கைது செய்ததுடன் கசிப்பினையும் மீட்டுள்ளனர். அதேவேளை குறித்த பெண் ஏற்கனவே பல தடவைகள் கைது செய்யப்பட்டு […]

இலங்கை

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 24 மணிநேர  நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு 1-4 மற்றும் கொழும்பு 7-11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும். கடுவெல மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கொலன்னாவ நகர சபை பகுதி, வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என […]

இலங்கை

வெளிநாடுகளில் தொழில் செய்ய தயாராகும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையர்கள் வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்லும் போது உயிரியளவியல் (Biometrics) தரவுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 ஜனவரி மாதத்தில் 24,236 இலங்கையர்கள் வெளிநாட்டு […]

இலங்கை

இலங்கையில் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்காக அறிமுகமாகும் நடைமுறை

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார். பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை பெற்றுக்கொடுக்க அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொழில் தகுதியுடையவர்களாக பிள்ளைகளை மாற்ற வேண்டுமாயின் முதலில் பெற்றோரிடத்தில் மாற்றம் வரவேண்டும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – 10 வயது சிறுமிக்கு ஆசிரியர் செய்த செயல்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் பாடசாலை மாணவியான பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த  ​எஹலியகொட பொலிஸார், அந்த ஆசிரியருக்கு 46 வயதாகும் என்றனர். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் […]

இலங்கை

அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தவருக்கு சத்திரசிகிச்சை – பொலிஸில் முறைப்பாடு

  • April 10, 2023
  • 0 Comments

தனியார் வைத்தியசாலையொன்றில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையினால் விரைப்பை இழந்ததாக ஒருவர் கொம்பஞ்சாவீதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் விடுமுறைக்காக வந்திருந்த போது வயிற்றில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் தெரிவித்தபோதும், மருத்துவர் அதைப் புறக்கணித்து, சாதாரண நிலைதான் என்று […]

இலங்கை

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்புப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துகளுக்கு அமைவாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றிருந்தது. இக்கூட்டத்தில் ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றம், தமது நாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மற்றைய நாட்டுப்பிரஜையை நாடுகடத்துதல் மற்றும் […]

இலங்கை

இலங்கை IMF நிதிய உதவியைப்பெறும் செயன்முறைக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க சீனா இணக்கம்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கை கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். அதேபோல்  இந்த விடயத்தில்  நிதியியல் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இலங்கை முகங்கொடுத்திருக்கும் குறுங்காலக்கடன் மீள்செலுத்துகை நெருக்கடிக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகக் […]

இலங்கை

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் பேரவை

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்கத்தூதுவருக்கும் இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (சி.ஈ.ஓ) பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது தற்போது நிலவும் சவால்கள் குறித்தும், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அனைத்துத்தரப்பினரும் கூட்டிணைந்து உதவக்கூடிய புதிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.  

You cannot copy content of this page

Skip to content