இலங்கை

இலங்கை பாடசாலை மாணவிக்கு சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்

  • April 10, 2023
  • 0 Comments

தம்புத்தேகம பிரதேசத்தில் 15 வயதான பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவியின் நண்பி, மாணவிக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் இருக்கும் காதல் தொடர்பு குறித்து மாணவியின் தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தாய் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தம்புத்தேகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவியின் பெற்றோர் வியாபாரத்திற்காக […]

இலங்கை

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட பணம்!!! யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல்

  • April 10, 2023
  • 0 Comments

கனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் காசினை பெற்றுக்கொண்டு , யாழ்ப்பாணம் பனிப்புலத்தில் தாக்குல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ,  பனிப்புலம் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காரில் சென்ற நபரை வழிமறித்த இருவர் , அவர் மீது வாள் வெட்டு தாக்குலை மேற்கொண்டனர். அத்துடன், கார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சங்கானை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். […]

இலங்கை

மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்ற கிளிநொச்சி பெண்ணை காணவில்லை

  • April 10, 2023
  • 0 Comments

மத்திய கிழக்கு நாட்டிற்கு வீட்டுப்  பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார். பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே மத்திய கிழக்கு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் அவரது கணவர் தெரிவிக்கையில், “கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுப்பணிக்காக மனைவி மத்திய கிழக்கிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து கடந்த […]

இலங்கை

இலங்கையில் பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைப்பு

  • April 10, 2023
  • 0 Comments

பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 1 ரூபாவாக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் ரம்ஜான் பண்டிகைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தன்னார்வ சங்கங்கள், நலன் விரும்பிகள் ஆகியோரிடம் இருந்து அன்னியச் செலாவணி இணைப்பு இல்லாமல் அன்பளிப்பாகவோ நன்கொடையாகவோ பெறும் திகதிகளுக்கு மட்டுமே இந்த வரி விலக்கு பொருந்தும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை

இத்தாலியில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

  • April 10, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை சேராதவர்களுக்கான வேலை வாய்ப்பினை இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இத்தாலியில் வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு 2023 மார்ச் 27 முதல் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பங்களை வரவேற்கத் தயாராகிவிட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரக் சாரதிகள், கட்டுமான தொழில், ஹோட்டல் தொழில், இயந்திரவியல் மற்றும் மின்சாரம், தொலைத்தொடர்பு, உணவுத் தொழில் உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், பங்களாதேஷ், கொரியா குடியரசு, எகிப்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தியா, […]

இலங்கை

காதல் முறிவால் மாணவி எடுத்த தவறான முடிவு

  • April 10, 2023
  • 0 Comments

இந்த வருடம் க.பொ.த  சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த மதவாச்சியி பாடசாலை மாணவி ஒருவர் காதல் உறவின் அடிப்படையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த மாணவியுடன் சிறிது காலம் காதல் உறவில் ஈடுபட்டு வந்த வேறொரு பாடசாலை மாணவர் தனது உறவை முறித்துக் கொண்டதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மாணவியின் தாயார் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் குறித்த மாணவி தந்தையின் பராமரிப்பில் இருந்துள்ளார். […]

இலங்கை

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு

  • April 10, 2023
  • 0 Comments

வவுனியா – குட்செட் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்களின் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 வயதான தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும், 36 வயதுடைய தாய், 09 வயது மற்றும் 03 வயதுடைய மகள்களின் சடலங்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாய் ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தந்தை தற்கொலை […]

இலங்கை

செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை ஆரம்பம்

  • April 10, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் உள்ள செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், செவித்திறன் குறைபாடுள்ள 50 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் இந்த வாரம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சுட்டிக்காட்டினார். “அந்த 50 பேரும் மிகவும் வெற்றிகரமாக வாகனங்களை ஓட்டினார்கள். விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை” என்றார். அதன்படி, இந்த வாரம் முதல் நாடு […]

இலங்கை

தாயின் முறைகேடான கணவனால் கொல்லப்பட்ட வாய் பேச முடியாத சிறுமி

  • April 10, 2023
  • 0 Comments

பாணந்துறை பகுதியில் ஊமைச் சிறுமியொருவர் தாயின் பிரிந்த கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை ஹிரண, லேக் வியூ, பண்டாரகம கல்துடே, தம்மகித்தி ஆரம்ப பாடசாலையின் விசேட பிரிவில் கல்வி பயிலும் பல்பொல பகுதியைச் சேர்ந்த ரோஷினி கவிஷ்க பெரேரா என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் காணப்படுவதாகவும், வாயில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை இராணுவ […]

இலங்கை

வீரகெட்டியவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் – 7பேர் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

  • April 10, 2023
  • 0 Comments

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததாகக் கூறப்படும் மோதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஏழு பொதுமக்கள் மார்ச் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அப்பகுதிக்கு விஜயம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சந்தேகத்தின் பேரில் வீதியோரமாக காத்திருந்த நபர்களை சோதனையிட்ட போது இந்த நிலைமை ஏற்பட்டது. எவ்வாறாயினும், குறித்த நபர்கள் அவர்களைத் தேடும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தது, பின்னர் சம்பவம் கைகலப்பாக மாறுவதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரிகளுடன் […]

You cannot copy content of this page

Skip to content