இலங்கை செய்தி

அடுத்த வாரம் முதல் தொடர் தொழிற்சங்க போராட்டம்!! இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி

  • April 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் சமீபத்திய வரித் திருத்தம் தொடர்பான தொழிற்சங்கங்களுக்கும்  நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற கலந்துரையாடல் உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்தது. இதனையடுத்து, தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும். இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பை தொடர்ந்து, தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் அருண சாந்தஆர்ச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கலந்துரையாடலின் போது எதிர்பார்த்த தீர்வுகள் முன்மொழியப்படவில்லை. இதேவேளை, சுகாதாரம் மற்றும் தபால் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் எதிர்வரும் வாரத்தில் வேலைநிறுத்தப் […]

இலங்கை செய்தி

மனைவியிடம் காசு வாங்க குழந்தையை அடித்து துன்புறுத்திய தந்தை

  • April 11, 2023
  • 0 Comments

ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பகமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஷ் ரொஹான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (10) ஹிகுரகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குழந்தை பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவியிடம் இருந்து பணம் பெறுவதற்காக, […]

இலங்கை செய்தி

கொழும்பில் ரயில் கழிவறைக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி  இருந்து பயணித்த விரைவு ரயிலின் கழிவறைக்குள் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் கைவிடப்பட்ட சிசு இரவு 7.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சிசு  கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

மாற்றாந்தாயின் கோர முகம் – 17 வயது சிறுமியை அடித்து கொடுமைப்படுத்திய கொடூரம்

  • April 11, 2023
  • 0 Comments

ராகம – குருகுலாவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுமியின் 39 வயதுடைய சித்தியை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமயறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு வடக்கில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்துவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் அதிகாரியின் கண்காணிப்பில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றைய தினத்தை விடவும், இன்றைய தினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என அந்த சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். நேற்றைய தினம் 24 கரட் பவுண் ஒன்றின் விலை 145000 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட […]

இலங்கை செய்தி

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் அடக்குமுறை : ஐ.நாவிடம் வலியுறுத்தி போராட்டம்!

  • April 11, 2023
  • 0 Comments

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் மோசமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், வசந்த முதலிகே உள்ளிட்டவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் இருவர் உயிரிழந்தமைக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது. தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கலைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரால் உபயோகிக்கப்படும் கண்ணீர்புகைக்குண்டுகள் காலாவதியானவை என்றும், விஷத்தன்மையுடையவை […]

இலங்கை செய்தி

மருந்து தட்டுப்பாடு இம்மாதத்தில் முடிவுக்கு வரும் – கெஹெலிய!

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பெரும்பாலும்  இம்மாதத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும். அத்துடன் சத்திர சிகிச்சை உட்பட முன்னுரிமையளிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (10) வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஷேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், அண்மையில் நடைபெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளின் போதும் வருடத்தின் முதல் காலாண்டுக்குள் […]

இலங்கை செய்தி

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அரச தொழில் கிடைக்காது : எச்சரிக்கும் அரசாங்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

அரச எதிர்ப்பு போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரச சேவையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் அரச சேவைகளை சீர்குலைக்கும் அல்லது  அதற்கு சமமான எதிர்ப்பு  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் விபரங்களை ஒரு தொகுப்பாக சேகரித்து பராமரித்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த பதிவுகள் தரவு உள்ளீடு வடிவத்தில் பராமரிக்கப்படவுள்ளதுடன் அத்தகைய நபர்கள் அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போதுஇ ​​அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் ஒன்றினையுமாறு சந்திரிக்கா அழைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் அனைவரையும் கட்சி, இன, மத பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுகின்றோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எனது ஆட்சி காலத்தில் ஆகக் கூடியது நூற்றுக்கு ஒரு சதவீத வட்டி அடிப்படையில் மாத்திரமே கடன் பெறப்பட்டது. ஆனால் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள மின்சார வாகனங்கள் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

  • April 11, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வரிச் சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.இந்த வேலைத்திட்டம் நேற்று (9) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கையை சுங்கத்துறை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் உதவியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார். அதேவேளை இலங்கையிலிருந்து சட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் […]

You cannot copy content of this page

Skip to content