ஐரோப்பா

இஸ்ரேல்-ஈரான் இடையே இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில் ஸ்டார்மர்,டர்ம்ப் இடையே தொலைபேசி உரையாடல்

  • June 14, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதலுக்கு மத்தியில், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கை குறித்து இரவு முழுவதும் தலைவர்கள் விவாதித்ததாகவும், ராஜதந்திரம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் குறித்து ஒப்புக் கொண்டதாகவும் ஸ்டார்மரின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து ஸ்டார்மர் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியதாகவும், அடுத்த வாரம் கனடாவில் நடைபெறும் G7 மாநாட்டில் மீண்டும் பேசுவதற்கு தலைவர்கள் […]

மத்திய கிழக்கு

அமெரிக்க தளங்களும் தாக்கப்படலாம் – எச்சரிக்கும் ஈரான்!

  • June 14, 2025
  • 0 Comments

ஈரானில் உள்ள மூத்த இராணுவ அதிகாரிகள், வரும் நாட்களில் பிராந்தியத்தில் ஏற்படும் மோதல் “அமெரிக்க தளங்களுக்கும் பரவும்” என்று எச்சரித்துள்ளனர். இஸ்ரேல் மீதான பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என்று அதிகாரிகள் எச்சரித்ததாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “இந்த மோதல் நேற்றிரவு வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் முடிவடையாது, ஈரானின் தாக்குதல்கள் தொடரும்” என்று பெயர் குறிப்பிடப்படாத ஒரு அதிகாரி கூறியதாக ஃபார்ஸ் மேற்கோளிட்டுள்ளது. “இந்த நடவடிக்கை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கும்.” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா

வியட்நாம் பிரிக்ஸ் அமைப்பில் ‘கூட்டாளி நாடாக’ அதிகாரப்பூர்வமாக இணைந்ததாக பிரேசில் அறிவிப்பு

  • June 14, 2025
  • 0 Comments

வியட்னாம் ‘பிரிக்ஸ்’அமைப்பில் பங்காளித்துவ நாடாக அதிகாரபூர்வமாக இணைவதாக பிரேசில் அரசாங்கம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தெரிவித்துள்ளது.இந்தத் தகுதியைப் பெறும் பத்தாவது நாடு வியட்னாம். முன்னதாக, வளரும் பொருளியலைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாக 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை இடம்பெற்றிருந்தன. பின்னர், தென்னாப்பிரிக்கா அதில் இணைந்துகொண்டது. தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்ட அந்த அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், இந்தோனீசியா ஆகியவை இணைந்தன. பெலருஸ், பொலிவியா, கஸகிஸ்தான், கியூபா, மலேசியா, […]

மத்திய கிழக்கு

ஈரான் – இஸ்ரேலிய பதற்றங்கள் : தனது வான்வெளியை மீளவும் திறந்த லெபனான்!

  • June 14, 2025
  • 0 Comments

ஈரான் – இஸ்ரேலிய பதற்றங்களுக்கு மத்தியில் லெபனான் தனது வான்வெளியை மீண்டும் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஸ இஸ்ரேலும் ஈரானும் ஒன்றையொன்று ஏவுகணைகளால் தாக்கியதால், இப்பகுதியில் விமானங்கள் நிறுத்தப்பட்டன. முன்னதாக, உள்ளூர் நேரப்படி காலை 7:30 மணிக்கு ஜோர்டான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது. ஜோர்டானின் தலைநகர் அம்மானில்   மக்கள் வெளியேற துடித்ததால் விமான நிலையம் குழப்பத்தில் இருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை

  இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டில் மட்டும் 3.5 வீதமாக குறையும் என தகவல்!

  • June 14, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதமாகக் குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மேலும் 3.1 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக 6 சதவீத வளர்ச்சி ஏற்பட்ட பிறகு, அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தகத் தடைகள், அதிகரித்த கொள்கை நிச்சயமற்ற தன்மை மற்றும் நிதிச் சந்தை ஏற்ற இறக்கம் ஆகியவற்றால் தெற்காசியாவில் செயல்பாடு குறைந்து வருவதாக உலக […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

ஈரானிடமிருந்து தொடர் தாக்குதல்கள் இடம்பெறலாம் – இஸ்ரேலியப் பிரதமர் எச்சரிக்கை

  • June 14, 2025
  • 0 Comments

ஈரான் மேலும் தொடர் தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் இன்னமும் முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்துக்காக போராடுமாறு ஈரானிய மக்களை நெதன்யாகுகேட்டுக்கொண்டார். தெஹ்ரான் இதற்கு முன்னர் இவ்வளவு வலுவிழந்திருக்கவில்லை என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் ராணுவத் தளபதிகளும் மூத்த அணுசக்தி அறிவியலாளர்களும் உயிரிழந்ததனை அவர் சுட்டினார்.

ஆசியா

சீனாவை ஆட்டிப்படைக்கும் சூறாவளி – பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட மக்கள்

  • June 14, 2025
  • 0 Comments

சீனாவின் தெற்குக் கரையை வூடிப்ச் சூறாவளி ஆட்டிப்படைத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 16,000 பேர் கட்டுமானத் தளங்களிலிருந்தும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளது. பல விமான, ரயில் சேவைகள் இரத்துசெய்யப்பட்டுள்ளன. நேற்று இரவிலிருந்து அந்த வட்டாரத்தில் கடும் காற்று வீசுகிறது. கனமழை பொழிகிறது. கப்பல்களில் வேலை செய்யும் சுமார் 40ஆயிரம் பேர் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சீனாவைத் தாக்கியுள்ள முதல் சூறாவளி இதுவாகும்.

மத்திய கிழக்கு

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்

  • June 14, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. சைரன் எச்சரிக்கைக்கு பின்னர் துணைமருத்துவ குழுவினர் ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டனர். பத்துபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தலைநகரிலிருந்து ரிசோன் லெசியோன் என்ற பகுதியில் வீடுகளை ஏவுகணைகள் தாக்கின என மகென் டேவிட் அலெம் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு 16-ன் அப்டேட் சிறப்பு அம்சங்கள்!

  • June 14, 2025
  • 0 Comments

ஆண்ட்ராய்டு (Android) கூகுளின் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமாகும் (Operating System). உலகெங்கிலும் கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு, மொபைல் ஃபோன்கள் பயன்படுத்தும் முறையை மிகவும் எளிமையாகவும் சீரானதாகவும் மாற்றி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கூகுள் புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், ஆண்ட்ராய்டு 16 என்ற புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை கூகுள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதிக பாதுகாப்பு அம்சங்கள், செயற்கை நுண்ணறிவு குறிப்பிடத்தக்க மாற்றங்களாக பார்க்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு 16-ன் முக்கிய அம்சங்கள்: ஆண்ட்ராய்டு […]

உலகம்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

  • June 14, 2025
  • 0 Comments

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி வழங்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. […]

Skip to content