பிரிட்டனில் மருந்தகங்களில் இருந்து திரும்பப் பெறப்படும் 15ற்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள்
பிரித்தானியாவில் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள ஒரு உட்பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இருமல் மருந்துகளில், இருமலைக் கட்டுப்படுத்துவதற்காக pholcodine என்னும் ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது.இந்த pholcodine, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கோ அறுவை சிகிச்சைக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.ஆகவேதான் இந்த மருந்துகள் திரும்பப்பெறப்படுகின்றன. அவற்றை வாங்கியுள்ள மக்கள் மருந்தகங்களை அணுகி அவற்றிற்கு பதிலாக மாற்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கீழ்க்கண்ட மருந்துகளில் pholcodine உள்ளது: […]