ஐரோப்பா செய்தி

ஸ்காட்லாந்தில் பலத்த காற்றினால் கவிழ்ந்த கப்பல்

  • April 15, 2023
  • 0 Comments

காட்லாந்தில் உள்ள கப்பல்துறையில் பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று பகுதியளவில் கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளானதில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஸ்காட்லாந்தின் எடின்பர்க் அருகே லீத் என்ற இடத்தில் கப்பல்துறை ஒன்றில் கப்பல் கவிழ்ந்ததில் பலர் காயமடைந்ததாக ஸ்காட்டிஷ் ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பலத்த காற்றினால் இச்சம்பவம் இடம்பெற்றதாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எடின்பர்க் காவல்துறை அவசர சேவைகளுக்கான அணுகலை அனுமதிக்கும் வகையில், மக்களை அப்பகுதியில் இருந்து விலகி […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன் யுரேனிய வெடிமருந்துகளை அனுப்புவது தீவிரமான!! ரஷ்யா எச்சரிக்கை

  • April 15, 2023
  • 0 Comments

பிரிட்டன் உக்ரைனுக்கு வெடிமருந்துகளை வழங்கினால், நெருக்கடி தீவிரமாகும் என ரஷ்யா புதன்கிழமை எச்சரித்தது. வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மோதல் மேலும் தீவிரமடைவதற்கான ஒரு படியாகும், மேலும் அது தீவிரமானது என்று கூறினார். அத்தகைய வெடிமருந்துகளின் பயன்பாடு உக்ரைனின் உயர்தரமான, மாசுபடாத உணவை உற்பத்தி செய்யும் திறனை கடுமையாக குறைக்கும் என்று அவர் கூறினார். செவ்வாயன்று, ஜனாதிபதி விளாடிமிர் புடின், அத்தகைய பிரிட்டிஷ் நடவடிக்கைகளுக்கு மாஸ்கோ நிர்பந்திக்கப்படும் என்று கூறினார். பிரிட்டன் பாதுகாப்பு மந்திரி அன்னாபெல் கோல்டியின் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி – டிக்டாக்கில் சிக்கிய காணொளி

  • April 15, 2023
  • 0 Comments

12 வயது பள்ளிச் சிறுமி மரணத்திற்கு ஆளாகுவதற்கு முன், தனது கொலையாளியுடன் சிரித்துக்கொண்டிருக்கும் காட்சிகள் டிக்டாக்கில் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமி, தன்னைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தனது வகுப்புத் தோழிகளுடன் சிரித்துக் கொண்டிருப்பதை வீடியோ காட்டுகிறது. ஜெர்மனியின் ஃப்ரூடன்பெர்க்கைச் சேர்ந்த லூயிஸ் எஃப், கொடூரமான தாக்குதலில் 32 முறை கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பல இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால் 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தான். […]

ஐரோப்பா செய்தி

சபோரிஜியாவில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

  • April 15, 2023
  • 0 Comments

சபோரிஜியாவில் இன்று ரஷ்யபடையினர் நடத்திய தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன். ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 25 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கீவ் பகுதியில் கல்விநிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உக்ரேனிய முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ டுவிட்டரில் இட்டுள்ள பதிவில், இது பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம் எனக் கண்டித்தார்.

ஐரோப்பா செய்தி

பதற்றங்களுக்கு மத்தியில் குரில் தீவில் இராணுவத்தளத்தை அமைத்த ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

பாஸ்டின் கடலோர பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் ஒரு பிரிவை ரஷ்யா பரமுஷிர் தீவில் நிலைநிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார். இது குரில் தீவுகளில் ஒன்றாகும். இது வடமேற்கு பசுபிக் தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இதன்படி தற்போது குறித்த பகுதியில் பாஸ்டியன் கடலோரா பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளதுடன், இராணுவ முகாமையும் அமைந்துள்ளது. குறித்த குரில் தீவுகளுக்கு ஜப்பான் உரிமை […]

ஐரோப்பா செய்தி

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள்

  • April 15, 2023
  • 0 Comments

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த திங்கட்கிழமை (20) […]

ஐரோப்பா செய்தி

பலத்த காற்றடித்ததால் சாய்ந்த பிரம்மாண்ட படகு: பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..

  • April 15, 2023
  • 0 Comments

ஸ்கொட்லாந்திலுள்ள படகுத்துறை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட படகு ஒன்று சாய்ந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 8.35 மணியளவில் பலத்த காற்று வீசியதால், Leith என்னுமிடத்திலுள்ள படகுத்துறை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரிய படகொன்று 45 டிகிரி சாய்ந்துள்ளது.திடீரென படகு சாய்ந்ததில், அதில் இருந்த ஊழியர்க்ள் 10 பேர் காயமடைந்துள்ளார்கள், இரண்டு பேரைக் காணாததால் பதற்றம் உருவாகியுள்ளது. RV Petrel என்னும் அந்த ஆராய்ச்சிப் படகு, மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான Paul Allen என்பவருக்கு சொந்தமானதாகும். […]

ஐரோப்பா செய்தி

யுரேனியம் அடங்கிய வெடிகுண்டுகளை வழங்கும் திட்டம் இல்லை – பிரித்தானியா!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு யுரேனியம் அடங்கிய வெடிமருந்துகளை வழங்குவதற்கான திட்டம் இல்லை என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு குறைந்த யுரேனியம் அடங்கிய வெடிமருந்துகளை இங்கிலாந்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானத்தை தொடர்ந்து ஜனாதிபதி விளாடிமிர் புடின் விமர்சித்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் அணுவாயுத மோதலை உருவாக்கலாம் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் சேர்கைய் சொய்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களில் இலகுவாக ஊடுறுவும், திறமைக் கொண்ட யுரேனியம் […]

ஐரோப்பா செய்தி

உயர்நிலை பள்ளி மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ்வில் அதிகரிக்கும் பதற்றம்

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள பள்ளி மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளி மீது ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல் தலைநகர் கீவ்-வுக்கு தெற்கே 80 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மீது நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

ஐரோப்பா செய்தி

சுவிஸில் ஒத்திகை பார்த்து தற்கொலை செய்துகொண்ட குடும்பம்: வெளியான திடுக்கிடும் தகவல்

  • April 15, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டு, மார்ச் மாதம், 24ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Montreux நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் ஏழாவது மாடியிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், ஒருவர் பின் ஒருவராக குதித்து தற்கொலை செய்துகொண்டார்கள். எட்டு வயது சிறுமி ஒருத்தி, அவளது அண்ணனான 15 வயது சிறுவன் ஒருவன், அவர்களுடைய தந்தை, மற்றும் இரட்டையர்களான தாயும் அந்த தாயின் சகோதரி ஆகியோர் அந்த மாடியிலிருந்து குதித்ததில், அந்த 15 வயது சிறுவன் மற்றும் படுகாயமடைந்த நிலையில் […]

You cannot copy content of this page

Skip to content