சிறுமியை அடித்து சித்திரவதை..எரியும் கட்டையை வாயில் திணித்த அவலம் !
இந்திய மாநிலம் சத்தீஷ்காரிலுள்ள ஆசிரமத்தில் பேய் ஒட்ட அழைத்து வரப்பட்ட சிறுமியை அடித்த 3 சீடர்கள் எரியும் கட்டையை வாயில் திணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூர் மாவட்டத்தில் அபான்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியைப் பேய் பிடித்துவிட்டது என்று, அச்சிறுமிக்குப் பேய் ஓட்டுவதற்காக குடும்பத்தினர் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மகாசாமுண்ட் மாவட்டத்திலுள்ள பதேராபலி கிராமத்தில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற இடத்தில் அந்த ஆசிரமம் உள்ளது. பேய் ஓட்ட அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை சீடர்கள் […]