தமிழ்நாடு

வேலை நேரத்தை உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு – பணிபகிஸ்கரிப்பை அறிவித்த தொழிற்சங்கங்கள்!

  • April 23, 2023
  • 0 Comments

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,   இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  ம.தி.மு.க.,  வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் திகதி  தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. சிஐடியூ மற்றும் ஏஐடியூசிஇ எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிக்ள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் மோதி விபத்து – மூவர் பலி!

  • April 23, 2023
  • 0 Comments

வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில்  22 வயதுடை ஆண் ஒருவரும் 21 மற்றும் 22 வயதுடைய இரு பெண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சாலையின் முழு அகலத்தையும் மூடாத தடுப்புகள் மூடப்பட்டிருந்தாலும், கார் ஒரு குறுக்கு வழியில் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மகள் திருமணம்; விசா இன்றி கலந்து கொண்ட இந்திய பெற்றோர்..!

  • April 23, 2023
  • 0 Comments

விருந்தினர் விசா கிடைக்காததால் மகளது திருமணத்திற்கு செல்ல புதிய வழியை கண்டுபிடித்த, பெற்றோரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சுனில் தார் என்பவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருக்கு டெல்லியை சேர்ந்த ஒரு பெண் மணமகளாக பேசி முடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இருவருக்கு அமெரிக்காவில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் அமெரிக்காவின் விருந்தினர் விசாவை பெற சில சமயம் ஓராண்டு கூட ஆகும் என்பதால் விருந்தினர் விசா […]

பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகர் சரத் பாபுவின் உடல்நிலைக் கவலைக்கிடம்!

  • April 23, 2023
  • 0 Comments

பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத் பாபு உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 71 வயதான சரத்பாபு விரைவில் குணமடைந்து நலம்பெற பிரபலங்கள்,  சக நடிகர்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சமீபத்திய அறிக்கைகளின்படி   உடல்நலக்கோளாறு காரணமாக சரத்பாபுவை ஹைதராபாத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தின்  கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் சற்று கவலைக்குரிய உடல் நலத்தில் இருந்து உடல்நலனில் தேறி […]

ஆப்பிரிக்கா

காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்பிடிக்கப்பட்ட 21 சடலங்கள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

  • April 23, 2023
  • 0 Comments

கென்யா நாட்டில் காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்திற்கு செல்முடியும். என்ற கருத்தை பாதிரியார் ஒருவர் முன்னெடுத்த நிலையில் இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டள்ளனர். இருப்பினும், இந்த கருத்தை பரப்பிய பாதிரியார் கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாணையின் போதே இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.உயிரிழந்தவர்களில் சிறு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சடலங்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கையொப்பம் திரட்டல்

  • April 23, 2023
  • 0 Comments

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை கிளிநொச்சி சேவைச்சந்தை பிரதான வாயிலில் இடம்பெற்ற குறித்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் மக்கள் பலரும் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர். குறித்த கையொப்ப பிரதிகளானதுஇ அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்களை பகிரங்கப்படுத்த வேண்டும்!

  • April 23, 2023
  • 0 Comments

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தரப்பினரிடமிருந்து 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர் யார் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிடைக்க வேண்டிய நஷ்ட ஈட்டை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்த […]

வட அமெரிக்கா

கருகலைப்பு மாத்திரைகளுக்கு அனுமதி அளித்த அமெரிக்க உச்சநீதிமன்றம்!

  • April 23, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பெண்கள் தங்கள் கருவை விருப்பப்பட்டால் கலைத்துக் கொள்ளும் உரிமை இருந்து வருகிறது.இதற்கான கருக்கலைப்பு மாத்திரைகள் கூட அமெரிக்க மருத்துவ சந்தைகளில் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில் கருக்கலைப்பு சட்டத்தை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் வோஷிங்டன் நீதிமன்றங்கள் […]

இந்தியா

தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங் கைது!

  • April 23, 2023
  • 0 Comments

இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியாக கருதப்படும் அம்ரித்பால் சிங் பஞ்சாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சீக்கியர்களுக்கு என தனிநாடு தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் அமைப்பின் தலைவராக கருதப்படுபவர் அம்ரித்பால் சிங். இவர் பஞ்சாபி நடிகர் தீப் சித்து உருவாக்கிய ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பினை நிர்வகித்து வருகிறார். பஞ்சாபில் முக்கிய நபராக குறுகிய காலத்திலேயே வலம் வந்த அம்ரித்பால், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு மிரட்டல் விடுத்ததால் நாடு முழுவதும் அறியப்படும் நபராக […]

இலங்கை

சாவகச்சேரியில் கைக்குண்டொன்று மீட்பு – பொலிஸார் விசாரணை!

  • April 23, 2023
  • 0 Comments

சாவகச்சேரி,  சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் தனது வீட்டு வளவினை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இந்த  கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.  இதனையடுத்து அவர் அந்த கைக்குண்டை  சாவகச்சேரி,  தம்பதோட்ட இராணுவ முகாமுக்கு எடுத்துச்சென்று இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தற்போது சாவகச்சேரி பொலிஸார் இந்த கைக்குண்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You cannot copy content of this page

Skip to content