பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி பெண் படுகொலை
பிரான்ஸில் இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Argenteuil (Val-dOise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு 25 வயதுடைய பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இக்கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர் கொல்லப்பட்ட பெண்ணின் துணைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]