இலங்கை

இலங்கையில் 49 வயது நபரால் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

  • May 2, 2023
  • 0 Comments

பாடசாலை உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுவனை துஷ்ப்பிரியோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் சந்தேகநபராக மொரட்டுவ எகொடஉயன பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைதாகிய சந்தேக நபர் ஹிரன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுவன் எகொடஉயன தொடர்ந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்று இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபரை இன்று நீதி மன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக […]

செய்தி தமிழ்நாடு

ட்ரோன் மூலம் வானில் வர்ணஜாலம் காட்டிய மாணவர்கள்

  • May 2, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை வைத்து வானில் வர்ணஜாலம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பிரத்தியேகமாக இடம் உருவாக்கப்பட்டு வரிசையாக ஒரே நேரத்தில் 200 ட்ரோன்கள் வைத்து அதற்கு கீழ் பகுதியில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்கள் அடுக்கடுக்காக மேலே பறக்க ஆரம்பித்தது. அவ்வாறு பறந்த ட்ரோன்கள் வெறும் வெளிச்சம் மட்டுமே கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்போதுதான் […]

இலங்கை

பயங்கரவாத தடை சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தல்!

  • May 2, 2023
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவ்வாறு நீக்க தவறினால் அதற்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என சிவில் உரிமை அமைப்புகள்,  தொழிற்சங்கங்கள்,  மாணவர் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பயங்கரவாத […]

ஆசியா

ஜீரோ கோவிட் திட்டம் ;சீனாவில் தொடரும் வேலையில்லா திண்டாட்டம்

  • May 2, 2023
  • 0 Comments

சீனாவில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால், அந்நாட்டு இளைஞர்கள் வேலை வேண்டி வழிபாட்டு தலங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா ஊடரங்கிற்கு பின்பு பொருளாதார நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்நாட்டு அரசால் கொண்டு வரப்பட்ட ஜீரோ கோவிட் திட்டத்தின் மூலம் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து அந்நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜீரோ கோவிட் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஓராண்டில் மட்டும் 11.50 மில்லியன் பட்டதாரிகள், வேலையில்லாமல் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை!

  • May 2, 2023
  • 0 Comments

இலங்கையில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்தியர் நிபுணர்கள் இந்த வருடம் இலங்கைக்கு திரும்பவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்கள் வெளிநாட்டில் தங்கி இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைசாத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை  பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

தன் விவாகரத்தை வைரலாக்கிய பிரபல சீரியலின் நடிகை!(புகைப்படங்கள்)

  • May 2, 2023
  • 0 Comments

பிரபல சீரியல் நடிகை ஷாலினி என்பவர் தான் விவாகரத்து பெற்றதை அறிவிக்க போட்டோஷூட் நடத்தி இருப்பது தற்போது வைரலாகி இருக்கிறது. முள்ளும் மலரும் சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இவர் ரியாஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில் தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.இதனையடுத்து இப்போது இருவரும் சட்டப் பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து ஒன்றும் மோசமானது இல்லை என மகிழ்ச்சியாக இருக்கும் விதமாக பல புகைப்படங்களை […]

ஐரோப்பா

ரஷ்ய அரசியலில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினின் இரகசிய காதலி

  • May 2, 2023
  • 0 Comments

சமீபத்தில், புடின் கொல்லப்படலாம் என்றும், அவர் கொல்லப்பட்டால் ரஷ்யா துண்டு துண்டாக உடைந்து நொறுங்கிவிடும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியிருந்த நிலையில், புடினுடைய இரகசிய காதலி, ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புடினுடைய இரகசிய காதலி என அறியப்படுபவர் அலீனா கபேவா(39). புடின் தன் முதல் மனைவியாகிய புடினாவுடன் வாழும்போதே, அலீனாவுடன் அவர் இரகசிய தொடர்பு வைத்திருந்ததாக தகவல் உண்டு. பின்னர் சுவிட்சர்லாந்தில் மறைந்துவாழ்ந்த அலீனா, […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

பேருந்து கட்டணங்களை குறைக்க தீர்மானம்!

  • May 2, 2023
  • 0 Comments

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கணக்கீட்டு நடவடிக்கைகள்முடிந்ததும் பேருந்து கட்டண திருத்தம் அமல்படுத்தப்படுமா இல்லையா என்பதை அறிவிப்போம் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை டீசல் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் டீசல் விலையில் 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணத்தை குறைக்க முடியாது […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

  • May 2, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் புதிய வாகன விதிகள் இந்த மாதம் அமுலுக்கு வருவதையொட்டி, வாகன ஓட்டிகளுக்கு அபராதங்கள் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். பிரித்தானியாவில், இளம் சாரதிகள் தங்கள் நண்பர்களுக்கு லிஃப்ட் கொடுக்க தடை விதிக்கப்பட உள்ளது. சாலைகள் துறை அமைச்சரான Richard Holden, இந்த விதி தொடர்பான சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவது குறித்து திட்டமிட்டுவருகிறார். அதாவது, இளைஞர்கள் கூட்டமாக வாகனத்தில் பயணிக்கும்போது, அவர்கள் தங்களுக்குள் ஜாலியாக பேசிக்கொண்டுவரும்போது, விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க இந்த விதி கொண்டுவரப்பட உள்ளது. ஓட்டுநர் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செப்டம்பர் மாதம் வரை மின் உற்பத்தியில் பிரச்சினை இல்லை!

  • May 2, 2023
  • 0 Comments

மற்றுமொரு நிலக்கரி கப்பல் இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நாட்டின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இருப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இலங்கைக்கு தேவையான நிலக்கரி இருப்புக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் ஹேஷான் சுமனசேகர தெரிவித்துள்ளார். இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை எவ்வித பிரச்சினையுமின்றி இயக்க […]

You cannot copy content of this page

Skip to content