சிங்கப்பூரில் பூனைகளைத் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு
சிங்கப்பூரில் பாடசாலைகளில் விலங்குநலப் பாடங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, கற்பிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சுக்கான துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்துள்ளார். விலங்கு நலனைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பாடசாலைகளுடன் பெற்றோர், சமூகப் பங்காளிகள் ஆகியோரும் ஏற்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பூனைகளைத் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு மட்டுமே இதுவரை 11 சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டு முழுமைக்கும் 16 சம்பவங்கள் ஏற்பட்டன. பாடசாலைகளின் குடியியல் கல்வி, சமூகக் கல்வி, அறிவியல் […]