கோடை காலத்திலும் நிரம்பி வழியும் பழைய சீவரம் பாலாறு தடுப்பணை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருமுக்கூடல் அருகே பாலாறு செய்யாறு வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன.இங்குள்ள ஆற்றுப் படுகைகளை மையமாகக் கொண்டு சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகின்றது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பழையசீவரம்-பழவேரி பாலாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42கோடி செலவில் புதிய தடுப்பணையானது நீர்வளத் துறை. மூலம் கட்டப்பட்டது.இந்த தடுப்பணையால் அரும்புலியூர், பாலுார், உள்ளாவூர் என பத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளிலுள்ள 12ஆயிரத்து 70ஏக்கர் விவசாய நிலங்கள் […]