அல்-கொய்தா அமைப்பால் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பின் விடிவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மருத்துவர்
மேற்கு ஆப்பிரிக்காவில் அல்-கொய்தா தீவிரவாதிகளால் சிறை வைக்கப்பட்டு இருந்த 88 வயதுடைய அவுஸ்திரேலிய மருத்துவர் கென்னத் எலியட் 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் மாலி மற்றும் புர்கினா பாசோ நகரின் இடையே உள்ள எல்லைக்கு அருகே அவுஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவர் கென்னத் எலியட் மற்றும் அவரது மனைவி ஜோஸ்லின் ஆகிய இருவரையும் அல்-கொய்தா தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர்.இந்த அவுஸ்திரேலியா தம்பதி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அங்கு மருத்துவ கிளினிக் வைத்து நடத்தி வந்தது […]