மலேசியாவில் உயிரிழந்த இலங்கை பெண் – கணவருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
மலேசியாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. உயிரிழந்த பெண் தொடர்பில் தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குருநாகல் – கொபேகனே பகுதியைச் சேர்ந்த நிலாந்தி பண்டார என்ற 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நிலாந்தி தனது நண்பர் ஒருவர் மூலம் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். […]