ஆசியா

பாலியில் உள்ள கோயிலில் திடீரென ஆடையைக் கழட்டி நடனம் ஆடிய ஜேர்மன் பெண் திகைத்து நின்ற மக்கள்!

  • May 27, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் பாலியில் உள்ள  கோவில் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் நிர்வாணமாக நடனமாடிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் ஜேர்மனை சேர்ந்த துஷின்ஸ்கி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 28 வயதான துஷின்ஸ்கி என்ற பெண் ஆலயத்தின் பாதுகாவலர்களை புறம் தள்ளியதாக கூறப்படுகிறது. பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நடனமாடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து துஷின்ஸ்கியை […]

பொழுதுபோக்கு

அடேங்கப்பா…. வடிவேலு இவ்வளோ பெரிய தில்லாலங்கடியா???

  • May 27, 2023
  • 0 Comments

வடிவேலு ஆரம்பத்தில் கிடைக்கிற வாய்ப்பை நடித்து கொடுத்துவிட்டு ஓரமாக கைகட்டி வேடிக்கை பார்க்கும் நபராக சினிமாவிற்கு என்டரி கொடுத்தார். அதன் பின் விஜயகாந்த் கொடுத்த வாய்ப்பால் அடுத்தடுத்த படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். இந்த நிலையில் வடிவேலு தாம் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டார் என்றே கூறவேண்டும். பண போதை, நான் என்ற அகங்காரம், மற்றும் புகழ். இது அனைத்துக்கும் இவர் ஒருவரே சொந்தக்காரர் என்ற மினுக்குடன் இருப்பதால் மற்றவர்களை தரைக்குறைவாக பேசுவதும், கீழ்த்தரமாக நடத்துவதும் […]

ஐரோப்பா

பெற்ற குழந்தையைக் கொலை செய்ய அனைவரையும் ஏமாற்றிய பெற்றோர்!

  • May 27, 2023
  • 0 Comments

ஃபின்லே போடன்  தங்கள் மகனைக் கொல்வதற்காக எல்லோரையும், ஏமாற்றிய விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபின்லே போடன்  தங்களது குழந்தையை கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்டனர். அப்போது கொவிட் காலம் என்பதால் விசாரணைகள் தொலைப்பேசி வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அவர்கள்   போதைபொருள் பாவனையாளர்களா என்பதை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டன. அதேநேரம் கொலை குற்றத்திற்காக பெற்றோர்கள் இருவரும்  சிறை தண்டனையை பெற்றனர். இது குறித்து விசாணைகளை ஆரம்பித்த   டெர்பிஷயர் காவல்துறை அதிகாரி “இந்த […]

ஐரோப்பா

லண்டன் ஹீட்த்ரோ விமான நிலையத்தில் செயல் இழந்த கடவுச்சீட்டு தானியங்கி கதவுகள்-பரிதவிக்கும் பயணிகள்

  • May 27, 2023
  • 0 Comments

லண்டன் ஹீட்த்ரோ விமான நிலையத்தில்கடவுச்சீட்டு தானியங்கி கதவுகள் செயழிலந்ததால்  இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தாமதத்தை எதிர்நோக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ, மான்செஸ்டர் மற்றும் கேட்விக் உள்ளிட்ட விமான நிலையங்களில் தொழிநுட்ப பிரச்சினைக் காரணமாக  நேற்று (27) முதல் பயணிகள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இடையூறுகளை சரிசெய்ய விமான நிறுவனங்கள் மற்றும் துறைமுக ஆப்ரேட்டர்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.   கடவுச்சீட்டு தானியங்கி கதவுகளில் என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும்  […]

ஐரோப்பா

ஜெர்மனியின் டாரஸ் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்குமாறு கோரும் உக்ரைன்!

  • May 27, 2023
  • 0 Comments

டாரஸ் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்குமாறு ஜெர்மனியிடம் உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது என  பெர்லினில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அது ஏவுகணைகளை வழங்கினால், ஜெர்மனி இங்கிலாந்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உக்ரைன் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன்காரணமாக அமெரிக்கா ராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பு (ATACMS) ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மறுத்துள்ளது. இருப்பினும் உக்ரைன் குறித்த […]

பொழுதுபோக்கு

வெளியான ஒரே நாளில் வெற்றிவிழா கொண்டிய கழுவேத்தி மூர்க்கன்

  • May 27, 2023
  • 0 Comments

டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமாரின் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். கௌதம ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தமிழ்நாட்டில் 310 திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. படம் வெளியான ஒரே நாளில் அப்படக்குழுவினர் அதன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதுகுறித்து ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் […]

இந்தியா

ராஜஸ்தானில் கனமழையால் 13 பேர் உயிரிழப்பு!

  • May 27, 2023
  • 0 Comments

ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 13 புர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேரும், ஆல்வார்,  ஜெய்ப்பூர் மற்றும் பிகானீரில் தலா ஒருவரும் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். டோங்க் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பயங்கரமான கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள்,  மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில்இ புயல் காரணமாக கடந்த இரு தினங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். […]

இலங்கை

திருமணமத்திற்கு தயாராகிய பெண் மீது அசிட் வீச்சு!

  • May 27, 2023
  • 0 Comments

வெலிகம,  மதுராகொட பிரதேசத்தில் இன்று (27) நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அமில வீச்சு (அசிட்) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 03 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அமிலத்தை வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த யுவதி தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளான யுவதி சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம மதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபருடன் […]

இலங்கை

சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை!

  • May 27, 2023
  • 0 Comments

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது. இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற நம்பகதன்மை மிக்க மனித உரிமை அமைப்பு ஜெனரல்சவேந்திரசில்வா குறித்த 50 பக்க ஆவணமொன்றை தயாரித்து 2020 ஜூலை மாதம் பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக அறிகின்றோம் […]

இலங்கை

இராஜதந்திர நோக்கங்களுக்காக 3 தூதரகங்களை அமைக்க நடவடிக்கை!

  • May 27, 2023
  • 0 Comments

ஈராக், ருமேனியா மற்றும் Cyprus  ஆகிய நாடுகளில் இராஜதந்திர நோக்கங்களுக்காக இலங்கை தூதரகங்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளில் அதிகளவான இலங்கையர்கள் இருப்பதனால் அவர்களைக் கவனித்துக் கொள்ள தூதரகங்கள் அமைப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊலிசரள மற்றும் ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகங்கள் இதற்கு முன்னதாக செயற்பட்ட நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று நாடுகளிலும் இலங்கை தூதரகங்களை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து […]

You cannot copy content of this page

Skip to content