இலங்கை

வெல்லம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

  • August 28, 2023
  • 0 Comments

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு 15 ஐச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

தமிழ்நாடு

கோவையில் 2 நாளில் 5 பெண்களிடம் நகை பறிப்பு – நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை

  • August 28, 2023
  • 0 Comments

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணப்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இரத்தினபுரி, டாடா பாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக மாநகர காவல்துறை சார்பில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த […]

ஆசியா

ஆப்கானிஸ்தானின் முக்கிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை!

  • August 28, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் உள்ள முக்கிய தேசிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பேன்ட் இ அமீர் தேசிய பூங்காவிற்குள் பெண்கள் ஹிஜாப் அணிந்த பிறகும் அதனை  சரியாக அணியவில்லை என்ற காரணத்தால், அதற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உரிய தீர்வு கிடைக்கும் வரை பூங்காவில் பெண்கள் செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் முதல் பூங்காவாக பெயரிடப்பட்டது, பேண்ட் இ அமீர் பூங்கா ஆப்கானிய குடும்பங்கள் […]

மத்திய கிழக்கு

வெளிவந்த ஜிம்பாப்வே தேர்தல் முடிவுகள் : மீண்டும் அதிபராக எம்மர்சன் மங்கக்வா

  • August 28, 2023
  • 0 Comments

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நாளில் நடைபெற வேண்டிய தேர்தல் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 24ம் திகதி வரை நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வாவுக்கும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்பான இந்த தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் எம்மர்சன் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் […]

இலங்கை

14 தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவந்த இலங்கையர் கைது!

  • August 28, 2023
  • 0 Comments

இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாகொல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய வர்த்தகர் ஒருவரே நேற்று (27.08) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாக்காக்கில் இருந்து வருகை தந்த அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொண்டு வந்த சில உடமைகளை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்தபோது, […]

இலங்கை

மஹியங்கனை – பதுளை வீதியில் விபத்து – ஒருவர் பலி!

  • August 28, 2023
  • 0 Comments

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மாபகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (27.08) காலை இடம்பெற்றுள்ளது. மொனராகலையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று  வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர். சாரதியும் மற்றுமொருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சாரதி மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]

இலங்கை

அடுத்த தேர்தலில் எந்தவொரு கட்சியனரும் 50 வீத வாக்குகளை பெற மாட்டார்கள்!

  • August 28, 2023
  • 0 Comments

கட்சி அரசியலை விட வேட்பாளர்கள் முன்வைக்கும் வேலைத்திட்டமும் அவர்களின் நடைமுறைத் தன்மையும் அடுத்த தேர்தலில் முக்கிய காரணியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதது மற்றும் வேட்பாளர்களின் வயது போன்ற விடயங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வலுவான காரணியாக அமையும். அண்மைக்காலம் வரை 20 வீதமாக இருந்த மிதக்கும் வாக்குகள் 40 வீதமாக அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட […]

இலங்கை

யாழ் தெல்லிப்பழை துர்க்காதேவி அம்மனின் தேர்த் திருவிழா இன்று!

  • August 28, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று திங்கட்கிழமை(28.08) நடைபெற்றது. தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் அதிகாலையில் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை நடைபெற்றது. இதனையடுத்து துர்க்கையம்மன் சித்திரத் தேரில் எழுந்தருளினார். இதன்போது பலரும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை(29.08) துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் காலை துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளது.

இலங்கை

ஹலவத்த பகுதியில் தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு!

  • August 28, 2023
  • 0 Comments

ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.08) இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இலிப்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுமார் மூன்று வருடங்களாக தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சகோதரி வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சடலம் ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]

இலங்கை

கனடாவில் இருந்து யாழ் வந்தவர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு!

  • August 28, 2023
  • 0 Comments

யாழ் தெல்லிப்பழை மகாஜன கல்லுரி ஒன்று கூடலில் மேடையில் நடனமாடிககொண்டிருந்த நபரே சனிக்கிழமை (26) திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே ஆவார். தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார். அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு […]