உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்திய ரஷ்யா!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று (29) நடத்திய தாக்குதலின் போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் உக்ரேனிய தொலைக்காட்சியிடம் இந்த தகவலை கூறியுள்ளார். தகாக்குதலின்போது பூர்வாங்கமாக இஸ்கண்டர்கள். S-300 மற்றும் S-400 ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். முன்னதாக, நாடு முழுவதும் உள்ள இலக்குகள் மீது டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியமைக் குறிப்பிடத்தக்கது.