ஐரோப்பா

பிரான்ஸில் பெண்களை பாதுகாக்க தீவிர முயற்சி

  • May 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெண்களுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார். பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இவ்வருடத்தின் கோடை காலம் முழுவதும் இந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பொது இடங்கள் நேரத்தை செலவிடும் பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். அதுபோன்ற சம்பவங்களின் போது சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் […]

இலங்கை

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றவருக்கு நேர்ந்த கதி

  • May 30, 2023
  • 0 Comments

பாத யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் மட்டக்களப்பில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக தங்கியிருந்த வேளை 74 வயதான குறித்த யாத்திரிகர் உயிரிழந்துள்ளதாக யாத்திரை மேற்கொள்ளும் ஏனைய யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.கைதடி பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம […]

இலங்கை

இலங்கை விமான நிலையங்களில் அரசியல்வாதிகளின் சலுகைகள் நீக்குமாறு கோரிக்கை

  • May 30, 2023
  • 0 Comments

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த அமரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், இது களவு மற்றும் மோசடிக்கு சமமானதாகும். அலி சப்ரி ரஹீமின்பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதற்கு நான் ஆதரவளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள் நீக்கப்பட வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரண பயணிகள் முனையம் […]

ஐரோப்பா

ஜெர்மனி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

  • May 30, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் மாணவர்களுக்கு 200 யுரோ வவுச்சர் வழங்கப்பட இருக்கின்றது. ஜெர்மனிய அரசாங்கமானது கொரோனா காலங்களில் இளைஞர் யுவதிகள் பலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் காரணத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வருடத்தில் ஒரு 200 யுரோ வவுச்சரை வழங்குவதற்கு தீர்மானித்து இருந்தது. இந்த வவுச்சர் 1.6.2023 இல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த புதிய நடைமுறை மூலம் 18 வயதை எட்டிய ஒரு நபர் 200 யுரோ வவுச்சரை […]

ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி பயணித்த 63 பேருக்கு நேர்ந்த கதி

  • May 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த 63 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு படகுகளில் அவர்கள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் centre régional opérationnel de surveillance et de sauvetage (Cross) மற்றும் Gris-Nez ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து, கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டனர். படகுகளில் ஒன்று அதன் இயந்திரத்தை […]

இலங்கை

இலங்கையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

  • May 30, 2023
  • 0 Comments

இலங்கையில் விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மத நல்லிணக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தரப்பினர்களினால் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு […]

இலங்கை செய்தி

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகியுள்ளன

  • May 29, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான doenets.lk அல்லது results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை அணுகலாம். 2022 டிசம்பரில் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 329,668 மாணவர்கள் தேர்வெழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

யாழ் மருத்துவ பீடம் வெற்றி

  • May 29, 2023
  • 0 Comments

இலங்கை மருத்துவ பீடங்களுக்கு இடையிலான உயர் குருதி அழுத்த வினாடி வினா போட்டி 2023 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழு வெற்றிபெற்றுள்ளது. வைகாசி மாதம் உயர் குருதி அழுத்த விழிப்புணர்வு மாதமாகவும், வைகாசி 17 ஆம் தேதி உலக உயர் குருதி அழுத்த தினமாகவும் உலக உயர் குருதி அழுத்த கழகத்தால் கொண்டாடப்படுகிறது. இந்த முக்கியமான மாதத்தை நினைவுகூரும் வகையில், நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவ நிபுணத்துவ அமைப்புகளால் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் நடந்த விபத்தில் பொலிஸ் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக பலி

  • May 29, 2023
  • 0 Comments

திங்களன்று ஒன்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரியும், பள்ளி பேருந்து ஓட்டுநரும் ஒன்ட்., உட்ஸ்டாக்கின் வடமேற்கே நடந்த விபத்தில் உயிரிழந்தனர். நெடுஞ்சாலை 59 மற்றும் ஆக்ஸ்போர்டு கவுண்டி சாலை 33 சந்திப்பில் காலை 7 மணிக்கு சற்று முன் நடந்த இந்த விபத்தின் போது பேருந்தில் மாணவர்கள் இல்லை. அத்துடன், அதிகாரியின் குறிக்கப்படாத வாகனத்தில் பயணிகள் இல்லை என்று மாகாண பொலிசார் தெரிவித்தனர். 35 வயதான Det.-Const. பெர்த் கவுண்டி OPP பிரிவைச் சேர்ந்த ஸ்டீவன் டூரன்கோ விபத்தில் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் கொள்ளை முயற்சியின் போது இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக்கொலை

  • May 29, 2023
  • 0 Comments

பிலடெல்பியாவில் 21 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கலீஜ் டைம்ஸ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் ஜூட் சாக்கோ என அடையாளம் காணப்பட்டார். அவர் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் நேரம்) வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கலீஜ் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. கலீஜ் டைம்ஸ் என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட ஒரு ஆங்கில நாளிதழ் ஏப்ரல் 1978 இல் தொடங்கப்பட்டது. […]

You cannot copy content of this page

Skip to content