பயாகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் வைத்தியசாலையில்!
பயாகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவத்துள்ளன. உணவு விஷமானமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுகவீனமடைந்தவர்களில், இலஞ்ச ஒழிப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகள், பெண்கள் உள்பட பல பொலிஸ் அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.