இலங்கை

பயாகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் வைத்தியசாலையில்!

  • September 7, 2023
  • 0 Comments

பயாகல  பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவத்துள்ளன. உணவு விஷமானமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுகவீனமடைந்தவர்களில், இலஞ்ச ஒழிப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகள், பெண்கள் உள்பட  பல பொலிஸ் அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

பாதுகாப்பு செயலாளரினால் வெளியிடப்பட்ட இரண்டு புதிய இலக்கிய புத்தகங்கள் மற்றும் பாடல்!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) எழுதிய இரண்டு புதிய இலக்கியப் படைப்புகள் மற்றும் ஒரு பாடல் நேற்று (செப். 06) கொழும்பில் நடைபெற்ற விழாவின் போது வெளியிடப்பட்டது. கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜெனரல் குணரத்னவினால் எழுதப்பட்ட இரண்டு புதிய இலக்கியப் படைப்புகள் “தரகே அகமனய” (Tharage Agamanaya) மற்றும் “காதோல் அத்து” (Kadol Aththu) (மொழிபெயர்ப்பு) […]

இலங்கை

மொரந்துடுவ பிரதேசத்தில் பெண்களிடம் அத்துமீறிய போலி பொலிஸ்

  • September 7, 2023
  • 0 Comments

வலான ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர் என போலி அடையாள அட்டையை காட்டி பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் மொரந்துடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்தோடு பெண்களிடம் தங்க நகைகள் மற்றும் பணத்தையும் சந்தேகநபர் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் குருநாகல் வீரம்புகெதர பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ஹங்வெல்ல, தெடிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு செல்ல தயார்!

  • September 7, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உள்ளுர் விசாரணைக்கு அன்றி சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (07.09) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது புலம்பெயர் மக்கள் […]

ஐரோப்பா

உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணை;கண்டனம் வெளியிட்டுள்ள ரஷ்யா

  • September 7, 2023
  • 0 Comments

உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனின் உக்ரைன் தலைநகருக்கான விஜயத்தின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்க தீர்மானித்துள்ள 31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் எறிகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது . உக்ரைனிற்கு பிளிங்கென் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர்மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது. மேலும் பிளிங்கென் […]

இலங்கை

பேருந்தில் பயணித்த பெண்னொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை ​நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தை நிறுத்திவிட்டு அதில் ஏறி குறித்த பெண்ணை சுட்டுள்ளனர். இதனை அடுத்து காயமடைந்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தென் அமெரிக்கா

பிரேசிலில் புயல்; ஒரே வீட்டில் 15 பேரின் உடல்கள்…! பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

  • September 7, 2023
  • 0 Comments

பிரேசிலில் கடந்த திங்கள்கிழமை இரவு பெரும் புயல் ஒன்று தாக்கியது. இதனால் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன. புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு ஒரே வீட்டில் 15 பேரின் உடல்களை மீட்புப் படை வீரர்கள் மீட்டு உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை […]

இலங்கை

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • September 7, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பயண தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் பூதாகாரமாக மாறியுள்ள நிலையில், இது குறித்து பெற்றோர் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (07.09) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பெற்றோர் சார்பில் […]

இந்தியா

G20 உச்சிமாநாட்டிற்காக உலகின் பிரமாண்ட நடராஜர் சிலை ஸ்தாபிப்பு!

உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் G20 உச்சிமாநாட்டிற்காக இந்தியா வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பல நூற்றாண்டுகள் பழமையான அரச கலை வடிவத்தை பிரதிபலிக்கும் கம்பீரமான நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள பாரத மண்டபம் G20 அரங்கின் முன்புறத்தில் நிறுவப்பட்ட உலகின் மிகப்பெரிய ‘நடராஜா’ சிலை, வலிமைமிக்க சோழப் பேரரசின் பூமியான தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள சுவாமிமலையில் செய்யப்பட்ட உலகின் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை இருபத்தி […]

பொழுதுபோக்கு

ஜவான் படம் எப்படி இருக்கு? அட்லீ நீ ஜெய்ச்சிட்டடா… ஜெயிச்சிட்ட

  • September 7, 2023
  • 0 Comments

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என இதுவரை அட்லீ இயக்கிய 4 தமிழ் படங்களும் மெகா ஹிட் அடித்துள்ள நிலையில், முதன்முறையாக ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் அட்லீ இயக்கி உள்ள ஜவான் படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆக்‌ஷன், மாஸ், மிரட்டல், நடிப்பு, எமோஷன் என […]