இந்தியா

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. ! துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் , 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இன்று ஏற்பட்ட புதிய வன்முறையில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தெங்னௌபால் மாவட்டத்தின் பல்லேல் நகரில் ஆயுதம் ஏந்திய உள்ளூர் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை காலை முதல் தொடர்ந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […]

இலங்கை

அதிக செலவு செய்யும் 10 அமைச்சகங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

அதிக செலவு செய்யும் பத்து (10) அமைச்சுக்களின் செலவுகளை பகுப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, இது தொடர்பான அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். தேசிய மதிப்பீட்டுக் கொள்கை தொடர்பான தனது அரசாங்கத்தின் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். இலங்கையின் அமைப்பில் ஒரு தேசிய கொள்கை இல்லாதது மற்றும் […]

பொழுதுபோக்கு

பிரித்தானியாவில் ‘லியோ’ செய்த சாதனை… 30 நிமிடங்களுக்குள் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்

  • September 8, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பிரிட்டனில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.. இந்த படத்திற்கான டிக்கெட் அனைத்தும், 30 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லியோ’ திரைப்படம் வெளியாக இன்னும் 40 நாட்கள் இருக்கும் நிலையில் அதற்குள் வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனை அமோகமாக இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. https://twitter.com/ahimsafilms/status/1699753996427440449 தமிழகத்திலும் இந்த படத்திற்கான டிக்கெட் […]

பொழுதுபோக்கு

மாரிமுத்துவின் மரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்

  • September 8, 2023
  • 0 Comments

நடிகர் மாரிமுத்துவின் மரணம் திரைத்துறையில் ஈடுசெய்யமுடியாத இழப்பாக உள்ளது. பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இவரது மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் படத்திலும் மாரிமுத்து நடித்திருந்தார். இதேவேளை, எதிர்நீச்சல் நாடகம் குறித்து மாரிமுத்துவிடம்ரஜினிகாந்த் கலந்துரையாடியிருந்தமையும் […]

ஐரோப்பா

வெளிநாடொன்றில் ஆப்பிரிக்க பெண்களால் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய பெண் (வீடியோ)

  • September 8, 2023
  • 0 Comments

நெதர்லாந்தில் இந்திய பெண்ணொருவரை ஆப்பிரிக்க பெண்கள் மூவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது. அந்த காணொளியில் இந்தியப் பெண்ணை நோக்கி ஆப்பிரிக்க பெண் ஒருவர் எதிர்ப்பு குரலை எழுப்பினார்.அதற்கு இந்தியப் பெண்ணும் பதில் கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்திய பெண்ணின் கையில் இருந்த கருப்பு கைப்பையை ஆப்பிரிக்க பெண் இழுக்கிறார்.இந்திய பெண் அதை தடுக்கும் நேரத்தில், ஆப்பிரிக்க பெண் […]

பொழுதுபோக்கு

சந்திரமுகி – 2 படத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

  • September 8, 2023
  • 0 Comments

சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியீட்டுத் தேதியை மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் நட்சத்திர நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இத்திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. […]

இலங்கை

களனி பல்கலைக்கழ மாணவர் திடீரென உயிரிழப்பு!

  • September 8, 2023
  • 0 Comments

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது  மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்றிரவு (07.09 ) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் 22 வயதுடைய  அகில இந்திரசேன என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

வட அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கவுள்ள அமெரிக்கா

  • September 8, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய […]

இலங்கை

வடகிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கையை இராணுவமே செய்து வருகிறது- அருட்தந்தை மா.சத்திவேல்

  • September 8, 2023
  • 0 Comments

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் இன்று (08.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமய தலைமைகள் தமது சமய உண்மையில் நின்று சமய அமைப்புக்கள் தந்துள்ள அதிகாரத்தையும், சமூக கௌரவத்தையும், பயன்படுத்தி சமூக நல்லிணக்கம் சமயங்களுக் கிடையிலான நல்லுறவு என்பவற்றை வளர்க்கவும், […]

இலங்கை

அதிகளவு செலவு செய்யும் அமைச்சுகளை ஆராய நடவடிக்கை!

  • September 8, 2023
  • 0 Comments

அதிகளவு பணம் செலவிடப்படும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்று மொழிகளிலும் பகுப்பாய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரலியகஹா மன்றில் இன்று (08.09) நடைபெற்ற “தேசிய மதிப்பீட்டுக் கொள்கை கட்டமைப்பை” வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தேசிய கொள்கைப் பொறிமுறையின் அடிப்படையில் மின்சார விநியோகத்தை அனுமதிக்க முடியும் எனவும் கூறினார்.