முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

மொரோக்கோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 296 பேர் உயிரிழப்பு

  • September 9, 2023
  • 0 Comments

மொராக்கோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 296 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணி விரைவாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்ததுடன், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான வரலாற்றுச் சிறப்புமிக்க மராகேச்சிலிருந்து தென்மேற்கே 44 மைல் (72 கிலோமீட்டர்) தூரத்தில் மையமாக […]

இலங்கை

செனல் 4 வீடியோ பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டவை – பாதுகாப்பு அமைச்சு கொந்தளிப்பு

  • September 9, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உத்தியோகப்பூர்வமாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தகவலாளரான ஹன்சீர் அஷாத் மௌலானாவின் தகவல்கள் அடங்கிய ஆவணப்படம் ஒன்றினை செனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியது. கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதற்காக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தற்கொலை குண்டுதாரிகளுடன் சந்திப்பை நடத்தியதாகவும் குறித்த […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

  • September 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பேஷோர் சாலையில் உள்ள காண்டோமினியம் பிளாக்கின் 25 வது மாடியில் இருந்து விழுந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். 26 வயதுமிக்க அந்த பெண்ணை சோதித்ததில் அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது. அவர் 25 வது மாடியில் இருந்து விழுந்ததாக வாசகர் கூறியதாக மதர்ஷிப் குறிப்பிட்டுள்ளது. அவர் சீனப்பெண் என்றும் கூறப்படுகிறது. கடந்த 7ஆம் திகதியன்று மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் அவர் விழுந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அன்று மாலை 6 மணியளவில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி வைரஸ்களை உருவாக்கும் அபாயம்

  • September 9, 2023
  • 0 Comments

Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து வரும் காலகட்டத்தில் இதைத் தவறாக பயன்படுத்தி வைரஸ்களைக் கூட உருவாக்க முடியும் என எச்சரித்துள்ளார் கூகுள் இணை நிறுவனர். ChatGPT-ன் வருகைக்குப் பிறகு நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பல ஏஐ கருவிகளும், மென்பொருட்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் மனிதர்களின் வாழ்க்கைமுறை எளிதாக்கிவிட்டது என நாம் நினைத்தாலும், அவற்றால் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், மனித […]

ஐரோப்பா

உலகளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – 15 ஆண்டுகள் காணாத நெருக்கடி

  • September 9, 2023
  • 0 Comments

உலகளாவிய அரிசி விலை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 ஆண்டுகள் காணாத அளவில் அரசி விலை அதிகரித்துள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் விலை 9.8 சதவீதம் உயர்ந்ததாக உணவு, வேளாண் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. உலகின் ஆகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா குறிப்பிட்ட அரிசி வகைகளுக்கு ஏற்றுமதித் தடை விதித்திருந்தது. அது வர்த்தகத்தில் தடை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கமுடிவதாக அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதித் தடை எத்தனை நாள் நீடிக்கும் எனக் குழம்பும் […]

ஐரோப்பா

ஜெர்மனி அகதிகளை கட்டுப்படுத்த அமுலாகும் கட்டுப்பாடு

  • September 9, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அகதிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஜெர்மனியில் அகதிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்த அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு ஜெர்மனியின் பிரதான எதிர்கட்சியானது சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. ஜெர்மனின் பாராளுமன்றமானது கடந்த கிழமை சில பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு இருக்கின்று. அதாவது குறிப்பாக இந்த நாடுகளில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைக்காது என்று இந்த பட்டியல் சொல்லுகின்றது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடான […]

ஐரோப்பா

பிரான்ஸில் இவ்வாண்டு மழலையர் பிரிவில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த கதி

  • September 9, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மூன்றரை வயதுக் குழந்தை வாகனம் ஒன்றுடன் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. PAU நகரில் உள்ள Marancy என்னும் பாடசாலையில் இவ்வாண்டு மழலையர் பிரிவில் சேர்க்கப்பட்ட Souhail என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த புதன்கிழமை தாயாருடன் பாடசாலையில் இருந்து வெளியேறிய Souhail தனியார் வாகனத் தரிப்பிடத்தில் தாயாரின் வாகனத்தில் ஏறுவதற்கு முற்பட்ட போது பின்னால் வந்த வாகனத்தின் சக்கரத்துக்குள் அகப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் குழந்தை மரணமடைந்ததாக […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – அயல் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்டவர் அடித்துக் கொலை

  • September 9, 2023
  • 0 Comments

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்பங்குவ பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை ​செய்யப்பட்டுள்ளார். வீடொன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 33 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்த நிலையில், வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் மதுபோதைக்கு அடிமையான ஒருவர் எனவும் அயல் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]

இலங்கை செய்தி

யாழ் பல்கலைக்கழக ஊடக ஆய்வு கூடத்திற்கு விஜயம் செய்த இந்திய துணைத் தூதுவர்

  • September 8, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் விஜயம் செய்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (05) யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளி வீதியில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்துக்குச் சென்ற இந்திய துணைத் தூதுவர் ஊடகத் துறையின் மேம்பாடு குறித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் ஊடக ஆய்வு கூடத்தின் செயற்பாடுகளை விளக்கியதுடன், ஊடக ஆய்வு கூடத்தில் உள்ள வசதிகள் மற்றும் உபகரணங்கள் […]

விளையாட்டு

யுஎஸ் ஓபனில் இடையூறு செய்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

  • September 8, 2023
  • 0 Comments

அமெரிக்க இளம்பெண் கோகோ காஃப், செக் குடியரசின் 10வது நிலை வீராங்கனையான கரோலினா முச்சோவாவை தோற்கடித்து யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டிக்கு காலநிலை எதிர்ப்பாளர்களின் இடையூறுகளைத் தகர்த்தார். ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நான்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையூறு செய்ததால் அரையிறுதி ஆட்டம் 49 நிமிடங்கள் தாமதமானது. அரங்கில் போராட்டக்காரர்களில் ஒருவரை அதிகாரிகள் அகற்ற முயன்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆட்டம் மீண்டும் தொடங்கும் போது, ஆறாம் நிலை வீராங்கனையான காஃப் […]