இலங்கை

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்கவும்; டயானா

  • June 9, 2023
  • 0 Comments

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார். “இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சமூக நோய் என்றால் என்னவென தெரியாது. இந்த நோய்களைப் பற்றி சில பிள்ளைகள் அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது என்றார். “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிக […]

இந்தியா வட அமெரிக்கா

நாடு கடத்தப்படவுள்ள இந்திய மாணவர்கள் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

  • June 9, 2023
  • 0 Comments

போலியான கல்லூரி சேர்க்கை தொடர்பில் ஏமாற்றப்பட்ட 700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்படும் சூழலில் சுமூக தீர்வு உறுதி என அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஆனால் வழக்குகள் தீர்க்கப்படும் போது மாணவர்களுக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுமா என்பது தொடர்பில் குடிவரவு அமைச்சர் Sean Fraser தெளிவு படுத்தவில்லை. கல்லூரி சேர்க்கை தொடர்பான போலியன கடிதம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஒரு தீர்வுக்காக தாங்கள் தீவிரமாக முயன்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச மாணவர்கள் விவகாரத்தில் […]

இலங்கை

இனப்படுகொலைகள் குறித்து கனடாவின் பிரகடனம், ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரிக்கை!

  • June 9, 2023
  • 0 Comments

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் நடைபெற்ற தேசிய பார்வை தொடர்பான கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,   கனடாவின் அரசியல்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பில் தான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், ஆதாரங்கள் அற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் […]

உலகம்

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் பலி

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் சட்டவிரோதமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். 6 குழந்தைகள் உள்பட 47 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 73 பேரை கடலோர ரோந்து படையினர் மீட்டதாக துனிசியா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  

ஐரோப்பா

தந்தை கண் முன்னே ரஷ்ய இளைஞரை கொன்ற சுறா பிடிபட்டது

  • June 9, 2023
  • 0 Comments

சுற்றுலா சென்றிருந்த ரஷ்ய இளைஞர் ஒருவரை அவரது தந்தையின் கண் முன்னே கபளீகரம் செய்த சுறா மீனை அதிகாரிகள் பிடித்துள்ளார்கள். ரஷ்யாவிலிருந்தால் உக்ரைனுடன் போருக்குச் செல்ல நேரிடலாம் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவோ என்னவோ எகிப்துக்கு தன் தந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார் விளாடிமிர் (23) என்ற இளைஞர்.ஆனால், Hurghada என்னுமிடத்தில் கடற்கரைக்குச் சென்றிருந்த விளாடிமிர் கடலில் நீந்திக்கொண்டிருக்க, அவரது தந்தை கரையிலிருந்தவண்ணம் அவரைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரைத் தாக்கத் துவங்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் […]

உலகம்

தீவிரமடையும் போர் பதற்றம்! அதிகரிக்கும் டிரோன் தாக்குதல்

உக்ரைன் ரஷ்யா போரில் ட்ரோன் தாக்குதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி கட்டிடம் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது. அ தில் சிலர் காயமடைந்தனர். பதிலுக்கு ரஷ்யாவும் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே மிகப்பெரிய அணையை குண்டு வைத்து தகர்த்ததாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள வோரோனேஜ் நகரில் இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் மீது […]

ஐரோப்பா

ககோவ்கா அணை தகர்ப்பிற்கு ரஷ்யா தான் காரணமா? : ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன்!

  • June 9, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை அழிக்கப்பட்டமைக்கு ரஷ்யா தான் காரணம் என்பதை நிரூபிக்கும் வகையில், தொலைப்பேசி அழைப்பை இடைமறித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ககோவ்கா அணை தகர்ப்பு விவகாரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி  உக்ரைனின் பாதுகாப்பு சேவை அதன் டெலிகிராம் சேனலில் கூறப்படும் உரையாடலின் ஒன்றரை நிமிட ஆடியோ கிளிப்பை வெளியிட்டது. அதில், ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர், பேரழிவின் பின்னணியில் தங்கள் நாசவேலை குழு […]

வட அமெரிக்கா

கல்வி சுற்றுலாவுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீக்கரை

  • June 9, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை கல்வி சுற்றுலா ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று தீக்கிரையாகி உள்ளது. பஸ்ஸில் பயணம் செய்த ஆரம்ப பாடசாலை மாணவர்கள் எவருக்கும் ஆபத்து கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு வாங்கூவார் பகுதியிலிருந்து பூங்கா ஒன்றிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது பஸ் திடீரென தீ பற்றி கொண்டுள்ளது. பஸ்ஸின் சாரதி, ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கூட்டாக இணைந்து மிக வேகமாக பாடசாலை மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. தரம் ஆறு மற்றும் ஏழு […]

இலங்கை

கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிடும் குழுவின் பிரதான சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் வயோதிபர்களின் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்ளையிடும் குழுவொன்றின் பிரதான சந்தேகநபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 9 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்த நால்வரும் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் மானிப்பாய் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேரூந்துகளில் பயணிக்கும் வயோதிபர்கள் மற்றும் பெண்களின் கைத்தொலைபேசிகளை மிகவும் சூட்சுமமான […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலைக்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை!

  • June 9, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் மயோன் எரிமலைக்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி  மயோன் பள்ளத்தின் 6-கிலோமீட்டர் (3.7-மைல்) சுற்றளவில் உள்ள பகுதி ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதயில் பல ஏழை கிராமவாசிகள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையிலேயே அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஆபத்து வலயத்திலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும், நெருக்கடி முடியும் வரை இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்ததாகவும் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் […]

You cannot copy content of this page

Skip to content