ஐரோப்பா

லண்டன் மக்களை வதைக்கும் வெப்பம் – இதுவரை இல்லாத அளவுக்கு பதிவு

  • June 12, 2023
  • 0 Comments

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக சனிக்கிழமை 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தகிக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல், மேற்கு லண்டனிலுள்ள ஹாமர்ஸ்மித் நகர மக்கள், தேம்ஸ் நதிக்கரையோரம் தஞ்சமடைந்தனர். தேம்ஸ் நதிக்கரையோரம் ஓய்வெடுப்பதோடு, படகுகளில் சென்றும் அவர்கள் பொழுதை போக்கினர். லண்டனில் கடும் வெப்பத்துக்கு மத்தியில் நடந்த அரச படை அணிவகுப்பு ஒத்திகை ஒன்றில் மூன்று வீரர்கள் மயங்கி வீழ்ந்தனர். அடுத்த வாரம் நடைபெறவுள்ள அரசரது பிறந்த நாள் […]

இலங்கை

அநுராதபுரத்தில் 3 சிறுவர்களின் அதிர்ச்சி செயல்!

  • June 12, 2023
  • 0 Comments

அநுராதபுரத்தில் மூன்று சிறுவர்கள் நேற்று காலை கைதுசெய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுர நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மாணவர்களான மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பரசங்கஸ்வெவ, ஆசிரிகம பிரதேசங்களில் வசிக்கும் 15 மற்றும் 17 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சாரதி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை உலுக்கிய கோர விபத்து – 10 பேர் பலி – ஆபத்தான நிலையில் 25 பேர்

  • June 12, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் – நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு 11.30 மணியளவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் சிட்னிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதியாக இருந்த 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூ […]

இலங்கை

ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த இலங்கை வீரர்கள் – கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விளக்கம்

  • June 12, 2023
  • 0 Comments

உலக கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டிகளிற்காக சிம்பாப்வே சென்ற இலங்கை அணியினர் அந்த நாட்டில் ஹோட்டலில் அறைகளிற்கு வெளியே சோர்வடைந்த நிலையில் பல மணிநேரம் காத்திருந்தனர். அதனை வெளிப்படுத்தும் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிற் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்து விளக்கமளித்துள்ளது. சிம்பாப்வேயில் ஹோட்டலிற்கு வெளியே காத்திருக்கும் படங்களை இலங்கை அணியின் பல வீரர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். சதீரசமரவிக்கிரமவும மகேஸ்தீக்சனவும் பகிர்ந்துகொண்டுள்ள பல படங்கள் வீரர்கள் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் புதிய கார்களை ஏற்றிச் சென்ற ரயிலுக்கு ஏற்பட்ட நிலை

  • June 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சரக்கு ரயில் பாரிய தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் வடக்கு அரிசோனாவில் புதிய கார்களை ஏற்றிச் சென்ற ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அரிசோனாவின் வில்லியம்ஸுக்கு கிழக்கே நடந்த இந்த சம்பவத்தில் 23 BNSF ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக CCEM ஏஜென்சி தெரிவித்துள்ளது. தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த கார்கள் பலவிதமான புதிய கார்கள் மற்றும் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஆனால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கோகோனினோ […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களின் நெகிழ்ச்சி செயல்!

  • June 12, 2023
  • 0 Comments

கொரியாவில் எதிர்பாராத விபத்திற்கு முகங்கொடுத்த கொரிய பிரஜை ஒருவரின் உயிரைக் காப்பாற்ற இலங்கை இளைஞர்கள் குழுவொன்று தீவிர முயற்சி எடுத்துள்ளது. இலங்கையர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொரியாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவரின் சிகிச்சைக்காக பணம் திரட்டும் நோக்கில் இந்த கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்கொரியாவின் நோக்ஸான் மைதானத்தில் இலங்கைத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போட்டியின் போது, ​​அருகில் நின்றிருந்த லொறியில் கைத்தொழில் வேலைக்காக வந்த கொரியர் நாட்டவரின் […]

ஐரோப்பா

ஜெர்மனி பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

  • June 12, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் இருந்து விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றவர்கள் தமது குழந்தைகளை பாடசாலையில் இருந்து விடுமுறை எடுத்து செல்வதற்காக அவர்கள் கையாண்டு வந்த தவறான மருத்துவ அத்தாட்சி பெறும் முறை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் 2 கிழமைகளுக்கு பாடசாலைகளில் கோடை கால விடுமுறை ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் பல பெற்றோர்கள் கோடைகால விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தங்களது பிள்ளைகளுடன் தமது சொந்த நாட்டுக்கு விடுமுறையை கழிக்க செல்வது வழமையாகும். இதேவேளையில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தின் வைத்திய சங்கம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் நகைக்கடையை திறந்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • June 12, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நகைக்கடை ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 80,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. Chambourcy (Yvelines) நகரில் உள்ள Cleor எனும் புகழ்பெற்ற நகைக்கடையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு கடையினை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். காலை 8 மணி அளவில் கடையின் ஊழியர்கள் கடையினை திறப்பதற்காக வருகை தந்த போது கடை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். அவர்களே பொலிஸாரை அழைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. கொள்ளையிடப்பட்ட நகைகளின் […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்

  • June 12, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மலிவுக் கட்டணத்தில் பல் மருத்துவச் சேவை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஆண்டுதோறும் 4,000 ஊழியர்கள் அதன் மூலம் பயனடைய முடியும் என கூறப்படுகின்றது. ஆறு ஆண்டுகளில் திட்டத்துக்கு 3 மில்லியன் வெள்ளி நிதி கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது. மனநலம், பயிற்சி வழி சிகிச்சை போன்றவற்றுக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர் உறுப்பினர் திட்ட மேம்பாட்டின் மூலம் அது சாத்தியமாகும். நேற்று நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர் நிலையமும் […]

இலங்கை

இலங்கையில் வறியவர்களாக மாறிய மக்கள் – புதிதாக இணைந்த 40 இலட்சம் பேர்

  • June 12, 2023
  • 0 Comments

இலங்கையில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மாறியுள்ளது. நாட்டில் Lirne asia நிறுவகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மொத்த வறியவர்களின் எண்ணிக்கை 70 இலட்சமாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களில் 81 சதவீதம் பேர் கிராமப்புற மக்கள் என்றும், 2019 முதல், கிராமப்புற வறுமை 15 சதவீதத்திலிருந்து 32 […]

You cannot copy content of this page

Skip to content