இந்தியா

மூன்று குழந்தைகளுக்கு தாயானதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை!

  • June 15, 2023
  • 0 Comments

இந்தியாவில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியை தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி இந்தூர் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை, அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மாநில அரசின் சுற்றறிக்கையின் பிரகாரம், ஊழியர் மூன்றாவது குழந்தை பெற்றால் அவரைப் பணியிலிருந்து நீக்க முடியும். இந்த விதியின்படி, அனைத்து வகையான […]

இலங்கை

இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு வலுவான கல்வி முறைமை அவசியம் – ஜனாதிபதி!

  • June 15, 2023
  • 0 Comments

2048 ஆம் ஆண்டளவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு வலுவான கல்வி முறைமை மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பிற்கான அமைச்சர்கள் குழுவை ஆதரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்படி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாட்டின் மனித வளத்தை சீரமைத்தல், கல்வி முறையை மேம்படுத்துதல், மற்றும் நாட்டை […]

செய்தி பொழுதுபோக்கு

“வாம்மா மின்னல்…” பிரபல காமெடி நடிகரின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டது

  • June 15, 2023
  • 0 Comments

முன்னணி காமெடி நடிகரான வடிவேலுவுக்கென்று தனி டீம் ஒன்று இருந்தது. அந்த டீமில் அல்வா வாசு, சிங்கமுத்து, பாவா லட்சுமணன், போண்டா மணி என பலர் இருப்பார்கள். இவர்களில் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுவுக்கும் முட்டிக்கொண்டது. அல்வா வாசு உயிரிழந்துவிட்டார். போண்டா மணி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மீண்டிருக்கிறார். பாவா லட்சுமணனும் முன்னர் போல் படங்களில் அதிகம் நடிப்பதில்லை. வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர் பாவா லட்சுமணன். இப்படி ரசிகர்களை சிரிக்க வைத்தவரின் வாழ்க்கை சமீபகாலமாக சோகத்தில் […]

ஐரோப்பா

சுவிஸில் விடுதியொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வெளிநாட்டவர்!

  • June 15, 2023
  • 0 Comments

சுவிஸ் ரிசார்ட் ஒன்றில், வெளிநாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Nendaz என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஒருவர் சாலையோரம் விழுந்து கிடந்ததைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பொலிஸாருக்குத் தகவலளித்தார். மருத்துவ உதவிக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையிலும் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள்.அந்த 24 வயது இளைஞர் […]

வட அமெரிக்கா

முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி ; கனடா அறிவிப்பு

  • June 15, 2023
  • 0 Comments

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் பலருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள்.இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, கனடா அரசு அந்த விடயத்தை சட்டப்பூர்வமாக அணுகிவருகிறது. இந்நிலையில், அந்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருடைய வழக்கும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் வரை, அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் […]

இலங்கை

இலங்கை சமூர்த்தி பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

  • June 15, 2023
  • 0 Comments

சமுர்த்தி மானியங்களை இழந்த பயனாளிகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நலன்புரிப் பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டார். புதிய நலத்திட்ட உதவித் திட்டம் ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  பயனாளிகளை என்றென்றும் ஏழைகளாக […]

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிடம், சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை!

  • June 15, 2023
  • 0 Comments

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிடம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தள்ளார். கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவருடைய கோரிக்கை வந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று […]

வட அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

  • June 15, 2023
  • 0 Comments

அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில் கடந்த வாரம் புளோரிடாவில் உள்ள மியாமி நகர கோர்ட்டு டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. சட்டவிரோதமாக அரசு ரகசியங்களை எடுத்துச் சென்றுவிட்டு, அவற்றை அரசு மீண்டும் திரும்பப் பெறமுடியாத அளவுக்கு அழித்துவிட முயன்றார் என்பது உள்பட டிரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து இந்த வழக்கில் டிரம்ப் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று டிரம்ப் தனது 77வது பிறந்த […]

இலங்கை

பொசன் தினத்தில் நடத்தப்பட்ட மதுபான தன்சல் : டிக்டொக்கில் வீடியோ பதிவேற்றிய 6 இளைஞர்கள் கைது!

  • June 15, 2023
  • 0 Comments

பொசன் பௌர்ணமி தினத்தன்று நடத்தப்பட்ட மதுபான தன்சல் குறித்த காட்சியை டிக்டொக் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த காணொலி டிக்டொக்கில் வைரலாக பரவியதை அடுத்து, இது சம்பந்தமான விசாரணைகளை பொலிஸ் மா அதிபர், கணினி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஒப்படைத்துள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த ஆறு பேரும் கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். 20 […]

ஐரோப்பா

நேட்டோ எல்லைக்கருகில் ரஷ்ய விமானப்படை விமானங்கள்; இடைமறித்த பிரித்தானியா

  • June 15, 2023
  • 0 Comments

நேற்று சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்கள் மூன்றை, பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இடைமறித்துள்ளன. நேட்டோ அமைப்பு, தன்னுடைய பலத்தை ரஷ்யா முதலான நாடுகளுக்குக் காட்டும் வகையில், ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ள உள்ளது. நேட்டோவின் 25 உறுப்பு நாடுகளிலிருந்து 10,000 உறுப்பினர்களும், 250 விமானங்களும் இந்த போர்ப்பயிற்சியில் கலந்துகொள்கிறார்கள்.அதற்காக, பிரித்தானிய விமானப்படை விமானங்கள், எஸ்தோனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த விமானங்கள்தான், சர்வதேச விதிகளை […]

You cannot copy content of this page

Skip to content