தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்களினூடாக இடம்பெறுகின்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதன்காரணமாக தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் எனவும் கணனி குற்றத்தடுப்பு பிரிவினர் மக்களின் வலியுறுத்தியுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (16.06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜெயநெத்சிறி இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விளம்பரங்கள் […]