300,000 அமெரிக்க டொலர்களை மோசடி – இலங்கையை விட்டு வெளியேற முயற்சித்தவரின் நிலை
இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 300,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொம்பனித்தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வசதி செய்து தருவதாக கூறி இந்திய பிரஜை 300,678 அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]