இலங்கை

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி நாளை தொடரும்…!

  • September 25, 2023
  • 0 Comments

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இன்று பிற்பகல் ஆரம்பமாகிய அகழ்வு பணியானது மாலையுடன் நிறுத்தப்பட்டிருந்தது. இன்றைய அகழ்வு பணிகளில் எந்தவொரு ஆயுதங்களோ, நகைககளோ மீட்கப்படாத நிலையில் நாளை (26) காலை 9 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாளாக அகழ்வுபணியானது இடம்பெறவுள்ளது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று (25) மாலை 2.30 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெற்றிருந்தது. […]

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் மற்றும் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் : வெளியான அப்டேட்

  • September 25, 2023
  • 0 Comments

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார் நடிகர் இன்று அதிகாரப்பூர்வமாக திட்டத்தை அறிவித்தார் மற்றும் ARM இன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தற்போது, திரையுலகின் முக்கிய பிரமுகர்களை ஒன்றிணைக்கும் இந்த திட்டத்தை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது எஸ்.கே.யின் 23வது படமாகும், எனவே தற்காலிகமாக ‘எஸ்கே23’ என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத திரைப்படம், இந்தியத் தளத்தில் ஒரு புதிய வித்தியாசமான சினிமா அனுபவமாக இருக்கும். […]

இலங்கை

கிழக்கில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

  • September 25, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தற்போதுள்ள அமைப்புக்குப் பதிலாக புதிய அமைப்பை நிறுவும் நடவடிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. இதனால், 2023.10.03 ஆம் திகதி முதல் புதிய அமைப்பை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பிக்கவுள்ளதால், வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்குவது 26ஆம் திகதி மாலை 7.00 மணிக்குப் பின்னர் 27 ஆம் திகதி […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிகெட் மைதானம் அமைக்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

  • September 25, 2023
  • 0 Comments

‘யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த அவர்,   தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளேன். துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த இசை நிகழ்வு இருக்கும் என நம்புகிறேன். […]

இலங்கை

சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 2-ம் உலகப் போர் குண்டு

  • September 25, 2023
  • 0 Comments

வெடிக்காத 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டு சிங்கப்பூர் அகழ்வாராய்ச்சி தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 25-ஆம் திகதி சிங்கப்பூர் அப்பர் புக்கித் திமா என்ற பகுதியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதே 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிகுண்டு அகற்றும் குழுவினர், அந்த குண்டை ஆராய்ந்தனர். இதில், […]

உலகம்

ஆயிரக்கணக்கானோர் பலிகொண்ட பெருவெள்ளம்… லிபியாவில் மொத்த அதிகாரிகளும் கைது!

  • September 25, 2023
  • 0 Comments

லிபியாவில் பெருவெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில், தற்போது நகர மேயர் உட்பட மொத்த அதிகாரிகளையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெர்னா நகரை வெள்ளத்தில் மூழ்கடித்த அணைகள் இடிந்து விழுந்ததில் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியம் குறித்த சந்தேகம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.லிபியாவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், புயலுக்கு பின்னர் டெர்னா நகரில் அணைகள் இடிந்து விழுந்தது தொடர்பாக எட்டு உள்ளூர் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு […]

இலங்கை

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இருவர்!

  • September 25, 2023
  • 0 Comments

வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து படகு மூலம் பயணத்தை மேற்கொண்ட குறித்த இருவரும் இன்று (25.09) அதிகாலை, தனுஷ்கோடி பகுதியில் இறங்கியதாக கூறப்படுகிறது. 58 மற்றும் 60 வயதுடைய இருவரே இவ்வாறு தஞ்சம் கோரி தமிழகம் சென்றுள்ளனர். தமிழக பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பின் அவர்கள் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு

காதலில் விழுந்தாரா பூஜா ஹெக்டே??? ராசியில்லாத நடிகைக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

  • September 25, 2023
  • 0 Comments

தமன்னா, திரிஷாவைத் தொடர்ந்து தற்போது நடிகை பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த நிலையில், படத்திற்கு நெகடிவ் கமெண்டுகள் வந்தால், […]

இலங்கை

மீகொடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி பாரிய கொள்ளை

  • September 25, 2023
  • 0 Comments

மீகொடையில் உள்ள தளபாடங்கள் மொத்த விற்பனை நிலையமொன்றில் இருந்து 08 மில்லியன் ரூபா பணத்தை இரண்டு சந்தேகநபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இன்று (25) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் ஆயுதங்களுடன் விற்பனை நிலையத்திறுகுள் நுழைந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

ஐரோப்பா

உலகின் 2-வது பெரிய கோயில் அமெரிக்காவில் திறப்பு

  • September 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 முதல் 2023 வரையிலான 12 ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12,500 தன்னார்வலர்கள் இந்த கோயிலை கட்டி உள்ளனர். 183 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயில் உலகின் மிகப்பெரிய 2-வது இந்து கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியில் இந்தியாவிற்கு வெளியே உலகின் இரண்டாவது பெரிய இந்து கோவிலை நடத்த உள்ளது, இது அக்டோபர் 8 ஆம் […]