பிரான்ஸ் மக்களின் பரிதாப நிலை – அதிகரிக்கும் மரணங்கள்
போரில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டு வரும் தாக்குதலில் தொடர்ந்து பிரான்ஸ் மக்கள் இலக்காகுவதாக குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக எட்டு பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் பதினெட்டாக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களில் குழந்தைகளும், சிறுவர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் Elisabeth Borne சற்று முன்னர் இத்தகவலை வெளியிட்டார்.