பொழுதுபோக்கு

தயாரிப்பாளர்களுடன் நிலவும் பிரச்சினைகள்! தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை

தயாரிப்பாளர்களுடன் நிலவும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம் சில நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுத்ததாக வெளியான செய்தியை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்ததாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், திரைப்பட தயாரிப்பாளர் […]

இந்தியா

செந்தில் பாலாஜி மீதான வழக்கு: 1500 பேரிடம் தீவிர விசாரணை!

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சாரதி மற்றும் நடத்துனர்களிடம் பணிக்கு பணம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி கைது செய்தனர். செந்தில் பாலாஜி உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பினால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார் […]

இலங்கை

யாழில் ஜெலட்டின் குச்சிகள் மீட்பு!

  • July 3, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நேற்று (02.07) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போதே ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு  மீட்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

இலங்கை கல்வி

உயர்தர மாணவர்களுக்கு வெளியாகியுள்ள விசேட செய்தி

  • July 3, 2023
  • 0 Comments

2019,2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பைத் தொடர்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். உரிய கடன் தொகையை பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு சார்ந்த (தொழிற்கல்வி) உயர் கல்வியை கற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறான 5,000 மாணவர்களிடம் இருந்து நாளை (04) முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

வட அமெரிக்கா

மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அதிபர் ஜோ பைடன்

  • July 3, 2023
  • 0 Comments

நேட்டோ கூட்டமைப்பை பலம்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை அவர் இங்கிலாந்து, லிதுர்வேனியா,ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.முதலில் லண்டன் செல்லும் ஜோ பைடன் இளவரசர் சார்லஸ்,பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு உறவுகளையும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பின்னர் லிதுவேனியாவில் 11 மற்றும் 12ம் திகதிகளில் நடைபெறும் நேட்டோ வருடாந்தர மாநாட்டில் ஜோ […]

பொழுதுபோக்கு

விஜய் அப்பாவுக்கு இரண்டு திருமணம் நடந்திருக்கு; அது விஜய்க்கும் தெரியுமாம்..

  • July 3, 2023
  • 0 Comments

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் எஸ்.ஏ சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டாரை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று பிரபல இயக்குனராக மாறினார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் சோபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் . […]

இலங்கை

யுவதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

  • July 3, 2023
  • 0 Comments

தனமல்வில – ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தாக்குதலிற்கு உள்ளான குறித்த யுவதி கான்ஸ்டபிளின் காதலி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் காதலனின் வெறிச்செயல்… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!

  • July 3, 2023
  • 0 Comments

அமெரிக்காவி 17 வயதான இளைஞனால் 15 வயது காதலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொல ராடா மாகாணம் கிரிலே புறநகர் பகுதியான தென் வேர் என்ற இடத்தில் வசித்து வந்தவர் லில்லி சில்லா (15)இவருக்கும் ஜோவனி சிரியோ (17) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் கடந்த 6 மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில் லில்லி சில்வா தனது காதலை திடீரென முறித்தார் இதனால் ஆத்திரம் அடைந்த ஜோவனிசிரியோ பல முறை காதலியை சந்தித்து பேச […]

இலங்கை

மன்னார் கட்டுக்கரை குளத்தில் மூழ்கிய மீன்பிடி வள்ளம் ;ஒருவர் பலி-ஒருவரை காணவில்லை

  • July 3, 2023
  • 0 Comments

மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(2) வள்ளம் ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒரு மீனவர் சடலம் இன்று திங்கட்கிழமை(3) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (57) என தெரிய வந்துள்ளது.காணாமல் போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து (37) தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த இரு மீனவர்களும் நேற்று (2) […]

ஆசியா

சீனா செல்வதை அமெரிக்கர்கள் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தல்!

  • July 3, 2023
  • 0 Comments

அமெரிக்கர்கள் சீனாவுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. தன்னிச்சையான சட்ட அமலாக்கம், வெளியேறும் தடைகள் மற்றும் தவறான காவலில் வைக்கப்படும் அபாயம் காரணமாக அமெரிக்கா மேற்படி பரிந்துரைத்துள்ளது. 78 வயதான அமெரிக்க பிரஜை  ஒருவருக்கு மே மாதம் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவுரை வருகிறது. சீனாவின் நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அச்சுறுத்தும் வகையில் சீனாவில் கடந்த வாரம் சட்டம் ஒன்று […]

You cannot copy content of this page

Skip to content