பொழுதுபோக்கு

சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! விரைவில் தொடங்கும் #Suriya43 படப்பிடிப்பு

சூர்யா ரசிகர்கர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் #Suriya43 இந்த ஆண்டின் பிற்பகுதியில் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் தேசிய விருது பெற்ற சூரரைப் போற்று திரைப்படத்தின் பின்னணியில் உள்ள திறமையான மூவரும் மீண்டும் இணைகின்றனர். இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் மீண்டும் இப்படத்தில் இணைகின்றனர். #Suriya43 கதைக்களம் ஒரு வசீகரிக்கும் கேங்க்ஸ்டர் கதையை தழுவியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  

இந்தியா

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்துக்கு அஜித் பவார் கடிதம்

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாக பிரிந்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் அஜித் பவார் மற்றும் அவரை ஆதரிக்கும் 8 எம்.எல்.ஏ-க்கள் கடந்த 2ம் திகதி அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்று சரத்பவார் மற்றும் அஜித் பவார் அணியினர் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை மும்பையில் குவித்துள்ளனர். இதில், அஜித் பவாருக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்களும், சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 17 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். இந்நிலையில், […]

இலங்கை

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது பொருத்தமற்றது – சாகர காரியவசம்!

  • July 5, 2023
  • 0 Comments

கொள்கை ரீதியில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது நாட்டுக்கு பொருத்தமற்றது எனவும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை வரையறை செய்ய வேண்டும் எனவும், ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற (05)  விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்கு விசாரணைகள் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதற்கு ஒரு தடையாக உள்ளன. வழக்கு விசாரணைகள் தாமதப்படும் போது […]

இலங்கை

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி விவகாரம்: முழுமையான விசாரணை அறிக்கையொன்றை தயாரிக்க கட்டளை – சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன்

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கான கட்டளை ஒன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு B/232 இன்று புதன்கிழமை(05) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏற்கனவே அழைக்கப்பட்ட 27 திணைக்களத்தின் பிரதிநிதிகள் சார்பில் பலர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியுள்ளார். அத்துடன் அரச […]

பொழுதுபோக்கு

அம்மாடியோவ்… இந்த டீ-சர்ட்டின் விலைய கேட்டாலே தலை சுற்றுதே….

  • July 5, 2023
  • 0 Comments

ஜவான் பட நாயகன் ஷாருக்கான், விமான நிலையத்திற்கு அணிந்து வந்திருந்த ப்ளூ நிற ஹூடி டீ-சர்ட்டின் விலை விவரம் வெளியாகி உள்ளது. நடிகர் ஷாருக்கான் அணிந்துவந்த ஹூடி டீசர்ட் ஹராட்ஸ் (Harrods) என்கிற நிறுவனத்தை சேர்ந்ததாம். இதன் விலையை இணையத்தில் தேடிப்பார்த்தால் 1094 அமெரிக்க டாலர்கள் என காட்டுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 89,000 ரூபாய். இதைப் பார்த்த ரசிகர்கள் சிம்பிளாக இருக்கும் இந்த டீ-சர்ட் இவ்ளோ காஸ்ட்லியா என வாயடைத்துப் போய் உள்ளனர். பாலிவுட் திரையுலகின் […]

மத்திய கிழக்கு

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே பதற்றத்தை ஏற்படுத்திய ஈரான்!

  • July 5, 2023
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே இரண்டு எண்ணெய் கப்பல்களை கைப்பற்ற ஈரான் முயற்சித்த நிலையில், குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதற்றத்தை தணிப்பதற்காக இரண்டாவது கப்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய கடற்படைக் கப்பல்கள் அமெரிக்க கடற்படை பேரிடர் சமிக்ஞைகளுக்கு பதிலளித்த பின்னர் பின்வாங்கியதாகவும், இரண்டு வணிகக் கப்பல்களும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அமெரிக்கா […]

இலங்கை

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு பலத்த காற்றுக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளுக்கும் , வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் கார் விபத்துக்குள்ளானதில் அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் . நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தனது மகனுடன் உ.பி மாநிலம் பாண்டவ் நகரில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது மீரட் என்ற இடத்தில் எதிரே வேகமாக வந்த டேங்கர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் பிரவீன் குமாரும், அவரது அவரது மகனும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கேன்டர் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்! 12 குழந்தைகள் உட்பட 43 பேர் படுகாயம்

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கார் தரிப்பிடத்தின் மீது ஏவுகணை தாக்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 43 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய இஸ்கந்தர் ஏவுகணை உள்ளூர் நேரப்படி 13:30 மணியளவில் பெர்வோமைஸ்கி நகரில் தரையிறங்கியது. உக்ரைன் அரசு வக்கீல் ஜெனரல் Andriy Kostin கூறுகையில், அப்பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. காயமடைந்தவர்களில் ஒரு வயது குழந்தையும் 10 மாத குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடங்களை குறிவைப்பது […]

பொழுதுபோக்கு

“ஒரு குட்டி பிரேக்” சமந்தாவின் அதிரடி தீர்மானம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…

  • July 5, 2023
  • 0 Comments

நடிகை சமந்தா சினிமாவில் இருந்து அதிரடியாக ஒரு குட்டி பிரேக் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி சினிமா உலகத்தை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 8 மாத காலம் சினிமாவுக்கு பிரேக் விட்டு இருந்த சமந்தா தனது உடல் நிலையை சரி செய்து விட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். யசோதா, சாகுந்தலம் படங்களை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள குஷி படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், சிட்டாடல் வெப்சீரிஸிலும் சமந்தா […]

You cannot copy content of this page

Skip to content