இலங்கை

திருகோணமலை- காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

  • October 23, 2023
  • 0 Comments

திருகோணமலை- பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் உள்ள காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அக்கிராம மக்கள் இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வெல்கம் விகாரை பகுதியிலுள்ள காணிகளை அபகரித்து அங்குள்ள காட்டு மரங்களை வெட்டி வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியை பொதுமக்கள் சுற்றி வளைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். வெல்கம் விகாரை வனப்பகுதியில் […]

இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சுற்றாடல் அமைச்சு : அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றம்!

  • October 23, 2023
  • 0 Comments

பல அமைச்சர்களின் அமைச்சுகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பதவி  மகிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்தோட்ட நிறுவன அபிவிருத்திக்கான அமைச்சரவை அல்லாத அமைச்சராக திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம்

அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை!

  • October 23, 2023
  • 0 Comments

மறு அறிவிப்பு வரும் வரை ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஈராக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் குடிமக்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பல்வேறு முரண்பட்ட காரணங்களால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதம், கடத்தல்கள், ஆயுத மோதல்கள், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் அந்த சந்தர்ப்பங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஈராக் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக […]

ஆசியா

சீனாவில் அலுமினிய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் பலி!

  • October 23, 2023
  • 0 Comments

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அலுமினிய கம்பிகளை வெளியேற்றும் சமயத்தில் உயர் வெப்பநிலை காரணமாக பாய்லர் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. […]

மத்திய கிழக்கு

ஹமாஸின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் : 70 பேர் பலி!

  • October 23, 2023
  • 0 Comments

காசா மீது இஸ்ரேலிய படையினர் இன்று (23.10) அதிகாலை மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனிய பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 320 இலக்குகளை குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளது. “ஹமாஸ் பயங்கரவாதிகள் அடங்கிய சுரங்கப்பாதைகள், டஜன் கணக்கான செயல்பாட்டு கட்டளை மையங்கள், மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள், இராணுவ வளாகங்கள் மற்றும் கண்காணிப்பு நிலைகள் ஆகியவை தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

இனி உலகநாயகன் சம்பவம் தான்… KH 234 டைட்டில் டீசர் ரெடி

  • October 23, 2023
  • 0 Comments

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார். இதனையடுத்து மீண்டும் இந்தியன் 2 படத்தை தொடங்கினார். கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பிரபாஸுடன் கல்கி படத்திலும் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் இயக்குநர் மணிரத்னம் உடன் கமல் இணையும் படம் பற்றி கடந்தாண்டு அபிஸியல் அப்டேட் வெளியானது. கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. […]

இலங்கை

கல்பிட்டியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

  • October 23, 2023
  • 0 Comments

கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசிரிகம தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கந்தகுளி, குறிஞ்சம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஆசிரிகம கத்தோலிக்க தேவாலயத்தின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளதுடன், இரவு உணவிற்காக தனது மனைவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், மனைவியின் மற்றொரு சகோதரன் அந்த இடத்திற்கு வந்து தகராறு செய்ததாகவும், அதைத் தீர்க்க முயன்றபோது, ​​அண்ணன் கூரிய ஆயுதத்தால் அவரைக் கொன்றுள்ளதாகவும் […]

இலங்கை

மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரேரணை குறித்து வெளியான தகவல்!

  • October 23, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக  மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சேமசிங்க சுட்டிக்காட்டினார். இதற்கமைய தற்போது மின்கட்டண முறைமையிலும் சமீபத்தில் மாற்றங்கள் […]

உலகம்

பாலஸ்தீனத்தில் ஐ.நா அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் 29 பேர் உயிரிழப்பு!

  • October 23, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிராக நடந்த தாக்குதலில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்ட செய்தியில், “காஸாவில் இருந்த எங்களுடைய பணியாளர்கள் 29 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 50 சதவீதத்தினர் ஆசிரியர்கள் ஆவர். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். எங்கள் வேதனைகளை ஒருவருக்கொருவர் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து […]

இலங்கை

இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • October 23, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (23) காலை பதவியேற்றனர். மேலும், வைத்தியர் ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.