ஆசியா

இந்தியாவில் வரவுள்ள தடை? உலகளாவிய செலவுகள் இன்னும் அதிகமாக உயரும் அபாயம்

ஏராளமான அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய இந்தியா யோசித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி பல அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. பாஸ்மதி அல்லாத அனைத்து வகை அரிசிகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா ஆகும். அரிசி ஏற்றுமதியை தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், […]

புகைப்பட தொகுப்பு

திருகோணமலையில் ஐ.எப் தமிழ் ஊடக அனுசரணையில் இரத்ததான முகாம்

  • July 13, 2023
  • 0 Comments

திருகோணமலை- தெவனிபியவர மகா வித்தியாலயத்தில் ஐ. எப் தமிழ் ஊடக வலையமைப்பினால் இன்று (13) இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குருதி பற்றாக்குறைக்கு உதவும் முகமாக பாடசாலை நிர்வாகம், பெற்றோர்களுடன் இணைந்து இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது கோமரங்கடவல வலயக் கல்வி பணிப்பாளர் கே.சீ.பியலத், தெவனிபியவர மஹா வித்தியாலயத்தின் அதிபர் சரத் ஜயசேகர மற்றும் ஆசிரியை இரத்ததான முகாம் பற்றி தமது கருத்துக்களையும் வெளியிட்டனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளிகள் இரத்த தானம் […]

இலங்கை

சாணக்கியனை தமிழ் தேசியவாதியென்று நம்புபவர்களுக்கு பிள்ளையான் விதித்துள்ள கோரிக்கை

சாணக்கியனை அரசிலுக்குள் இழுத்துவந்தவர்கள், அவரை தமிழ் தேசியவாதியென்று நம்புபவர்கள் எதிர்காலத்தில் சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்சேனை விநாயகர் அணைக்கட்டின் மீள்நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”அண்மையில் விவசாய இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பு வருகைதந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் தவறான செய்தியை வெளியிட்ட இரு சிங்கள ஊடகங்கள்

  • July 13, 2023
  • 0 Comments

இலங்கையின் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியானது, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சித்திரதை முகாம்” என, இலங்கையின் இரண்டு சிங்கள ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான தினமின பத்திரிகை மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான தனியார் பத்திரிகையான திவயின ஆகிய இரு பத்திரிகைகளும் இந்த தவறான செய்தியை வெளியிட்டுள்ளனகுறித்த இரு பத்திரிகைகளிலும் ஒரே செய்தி இரு வேறு ஊடகவியலாளர்களின் பெயர்களில் வெளியாகியுள்ளது. “புலிகளின் சித்திரவதை முகாமில் […]

செய்தி

‘காவாலா’ பாடலுக்கு சிம்ரன் ஆடினா எப்படி இருக்கும்?? வைரலாகும் வீடியோ…

  • July 13, 2023
  • 0 Comments

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலில் சிம்ரன் நடனமாடும் வகையில் AI வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் […]

உலகம்

ஓடுபாதையில் சறுக்கி விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடைந்த விமானம்!

  • July 13, 2023
  • 0 Comments

விமானம் ஒன்று தரையிறங்கும்போது, ஓடுபாதையில் சறுக்கி, விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடையும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன. இணையத்தில் வேகமாக பரவிவரும் வீடியோ ஒன்றில், அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து சறுக்கி, விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடைவதையும், விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று ஓடிவருவதையும் காணமுடிகிறது. சோமாலியா நாட்டில் நடந்த இந்த சம்பவத்தில், அந்த விமானத்தில் 30 பயணிகளும், நான்கு பணிப்பெண்களும் இருந்துள்ளார்கள். ஆனால், சிறு காயங்கள் தவிர்த்து யாரும் அந்த விபத்தில் […]

இலங்கை

இந்திய அரசால் வழங்கப்பட்ட பேரூந்துகள்; இன்று யாழில் மீள கையளிப்பு நிகழ்வு

  • July 13, 2023
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் மீள கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (13) இடம்பெறவுள்ளது வடக்கு மாகாணங்களின் ஓவ்வொரு மாவட்டங்களிலுள்ள இ.போ.ச.க்கு சொந்தமான சாலைகளுக்கும் கிராமிய மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்த இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் புதிய பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா 04, யாழ்ப்பாணம் 04 ,கிளிநொச்சி 04,மன்னார் 03, முல்லைத்தீவு 03,பருத்தித்துறை 03, காரைநகர். […]

இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம்

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர்களின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 34 வது ஆண்டு நினைவு தினம் இன்று காலை வலி மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள அமரரது உருவச் சிலையடியில் இடம் பெற்றது. இதன்போது அமரரது உருவச்சிலைக்கு மலர்மாலை […]

ஐரோப்பா

சுவிஸில் மனித உரிமைகள் மீறல்… ரஷ்ய அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி

  • July 13, 2023
  • 0 Comments

ரஷ்ய அமைப்பு ஒன்று, சுவிட்சர்லாந்தில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள விடயம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கும் ரஷ்ய அமைப்பான Russian Mission in Geneva என்னும் அமைப்பு, ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த ட்வீட்டில் சர்ச்சைக்குரிய மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1. சுவிட்சர்லாந்தில் ரஷ்யர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். 2. சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் அமைந்துள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. 3. சுவிட்சர்லாந்து, பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துகிறது. இந்த […]

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக ஒருபோதும் நஷ்டஈட்டை பெறப்போவதில்லை -மனுவல் உதயச்சந்திரா

  • July 13, 2023
  • 0 Comments

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது?,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.மன்னாரில் இன்று வியாழக்கிழமை(13) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக அதிகாரிகள்(OMP) மரணச் சான்றிதழ் மற்றும் […]

You cannot copy content of this page

Skip to content