இலங்கை

சவுதி அரேபியாவில் மோசமாக நடத்தப்படும் இலங்கை பெண்கள்!

  • July 17, 2023
  • 0 Comments

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயரும் தொழிலாளர்கள் அந்நாடுகளில் சொல்லொனா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அந்தவகையில், நுவரெலியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண் ஒருவர் மிக மோசமான சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். அவருடைய உடலில் ஊசிகள் செலுத்தி சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். ருத்துவபரிசோதனையின்போது ஐந்து நீளமான ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரேலியாமாவட்ட மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒன்பது நாள் மிகமோசமான சித்திரவதையின் பின்னர் சிவரஞ்சினி இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி […]

உலகம்

விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு : பெண் பயணியின் துணிச்சலான செயல்! (வீடியோ)

  • July 17, 2023
  • 0 Comments

விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், பயணி ஒருவர் விமானத்தை இயக்கி மக்களை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டரில் இருந்து புறப்பட்ட ஒரு சிறிய விமானத்தை இயக்கிய விமானக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த விமானத்தில் பயணித்த கனெக்டிகட் பெண் ஒருவர் தக்க சமயத்தில் விமானத்தை இயக்கி மாசசூசெட்ஸின் மேற்கு டிஸ்பரியில் உள்ள மார்தாஸ் வைன்யார்ட் விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகே தரையிறக்கினார். இதனால் குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர். […]

ஐரோப்பா

பிரான்ஸிற்கு உக்ரைனில் இருந்து நவீன ஆயுதங்கள் கொண்டு சென்ற மர்ம நபர்கள்

  • July 17, 2023
  • 0 Comments

உக்ரைனில் இருந்து நவீன ஆயுதங்கள் சிலவற்றை மறைத்து பிரான்ஸிற்கு எடுத்து சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கவரித்துறையினரால் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் இருந்து கலே (Calais) வழியாக பிரான்சுக்குள் நுழைந்த வாகனம் ஒன்றை சுங்கவரித்துறையினர் சோதனையிட்டனர். இதன் போது, வாகனத்திற்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘ரொக்கட் லோஞ்சர்’ ஆயுதம் ஒன்றும் மேலும் பல துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வரியால் சர்ச்சை – உணவகங்களில் உணவு அருந்துபவர்கள் நெருக்கடியில்

  • July 17, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் உணவகங்களில் உணவு அருந்துபவர்களிடம் இருந்து பெறப்படும் வரி தொடர்பாக தற்பொழுது சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் கொவிட் காலங்களில் உணவு உட்கொள்கின்றவர்களுக்கு உணவு பொருட்களுக்கான மேலதிக வரியானது 19 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு 7 சதவீதமாக குறைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் உணவகங்கள் மூடப்படுவதை தவிர்ப்பதற்காக அவர்களது வருமானத்தை ஓரளவு சரிசெய்வதற்காக அரசாங்கத்தால் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இந்த நடைமுறையானது டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் வேளையில் மீண்டும் பழைய நிலைமைக்கு அதாவது […]

இலங்கை

இலங்கை தொழிலாளர்களின் வேலை நேரத்தை 16 மணிநேரமாக்க முயற்சி!

  • July 17, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நடவடிக்கையாக உழைக்கும் மக்களின் உரிமைகளை உத்தேச புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் இல்லாதொழிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக   பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  இந்த புதிய சட்டத்தின் மூலம் இதுவரை உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய 13  சட்டங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “இதுபோன்ற பொருளாதார […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் வேலைக்கு புதிய சிக்கல்

  • July 17, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் வேலைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின் படுக்கை இடங்களில் தற்போது பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் சுமார் 17,000 புதிய படுக்கைகள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2022 தொடக்கம் முதல் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் புதிய ஊழியர்கள் அதிகமானோர் […]

இலங்கை

இலங்கையில் மயக்க ஊசி செலுத்தப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழப்பு!

  • July 17, 2023
  • 0 Comments

அனுராதபுரம் வைத்தியசாலையில் மயக்க மருந்து செலுத்திய நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த  மரணம் கடந்த மாதம் 06. 28ஆம் திகதி நிகழ்ந்ததாகக் அந்தச் சங்கத்தின் தலைவர்  ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மரணம் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோயாளியின் அக்குளில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு மயக்க ஊசி செலுத்தியும் சுயநினைவு வராமல் இறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறும் மக்கள் – கடவுசீட்டு பெற குவியும் விண்ணப்பங்கள்

  • July 17, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான நடைமுறை 51 பிரதேச செயலகங்களில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது அதற்கமைய, ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு 29,578 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். அவர்களில் 24,285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். ஒரு நாள் சேவையின் மூலம் 5,294 பேர் சமர்ப்பித்துள்ளதாகவும், பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பிரதேச செயலகங்களினால் ஒன்லைன் முறையின் ஊடாக […]

உலகம் செய்தி

வாக்னர் குழுவிற்கு புதிய தலைவர்!! அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் புடின்

  • July 16, 2023
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் வளர்க்கப்பட்ட “வாக்னர் குரூப்” என்ற தனியார் இராணுவத்தை ஜூன் 23 அன்று உலகம் முழுவதும் பார்த்தது. இந்த சம்பவம் புடினுக்கு ஈடுசெய்ய முடியாத அதிர்ச்சியை அளித்தது. புடினுக்கு எதிராக கிளர்ச்சியை கிளப்பிய தனிப்படையின் தலைவர் பிரிகோஜின் தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த பின்னணியில் தனது நம்பிக்கைக்குரியவரை தனிப்படையின் தலைவராக நியமிக்க தயாராகி வருகிறார் புடின். இந்த பட்டியலில் உள்ள ஒருவரின் பெயர் குறித்து பல விவாதங்கள் நடந்து வருகின்றன. […]

இலங்கை செய்தி

வரிக் கோப்பை திறக்கவில்லை என்றால் வழக்கு தொடர தயார்நிலை

  • July 16, 2023
  • 0 Comments

மக்கள் தாமாக முன்வந்து வரிக் கோப்புகளைத் திறப்பார்களா என்று நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் அது நடக்கவில்லை என்றால் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் (IRD) ரஞ்சித் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். எகனாமி நெக்ஸ்ட் இணையதளத்தில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: “வரி ஏய்ப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எங்களிடம் உள்ளன, நாங்கள் ஏற்கனவே அதைச் செய்து வருகிறோம். உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் மக்களை அவர்களின் வாகன உரிமை அல்லது அதுபோன்ற சொத்துக்களை […]

You cannot copy content of this page

Skip to content