பொழுதுபோக்கு

இந்தியன் 2 அப்டேட்டுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி வெளியானது….

  • October 28, 2023
  • 0 Comments

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகவில்லை. இந்நிலையில் நாளை (அக்.29) காலை 11 மணிக்கு இந்தியன் 2 அப்டேட் வெளியாகும் என படக்குழு வித்தியாசமாக அறிவித்துள்ளது. கமல் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் […]

உலகம்

கஜகஸ்தானின் உருக்கு சுரங்கத்தில் தீவிபத்து : 25 பேர் பலி!

  • October 28, 2023
  • 0 Comments

கஜகஸ்தானில் உள்ள மிகப்பெரிய உருக்கு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏறக்குறைய  25 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரகண்டாவில் உள்ள தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த தீவிபத்தில் சிக்கி மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது சுரங்கத்திற்குள் 252 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23 பேரை காணவில்லை என்றும்  அதன் உரிமையாளரான  ஆர்செலர் மிட்டல் டெமிர்டாவ் கூறினார். தீ விபத்திற்கான காரணம் அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் பலப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

  • October 28, 2023
  • 0 Comments

பாபெட் புயலின் தாக்கத்தால் இங்கிலாந்தின் பலப் பகுதிகளில் மழையுடனான வானிலை நீடிக்கும் என மெட் Met office தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த வாரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில்  மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன்,  மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில், அபெர்டீன், அபெர்டீன்ஷைர், அங்கஸ், டண்டீ மற்றும் பெர்த் மற்றும் கின்ரோஸ் ஆகிய பகுதிகளுக்கு மேற்படி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாபெட் புயல் காரணமாக ஏற்கனவே அதிக நீர் நிலைகள் வெள்ள […]

இலங்கை

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : தாக்குதல்தாரி தற்கொலை!

  • October 28, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில்  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஏறக்குறைய 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் அன்றைய தினம் தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்று (27.10) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் […]

பொழுதுபோக்கு

ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த சூர்யா பட வீடியோ

  • October 28, 2023
  • 0 Comments

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இதையடுத்து சூர்யா 43 படத்தின் அறிவிப்பு வீடியோ […]

இலங்கை

அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இறக்குமதி செய்ய நடவடிக்கை!

  • October 28, 2023
  • 0 Comments

சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்  விலைக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர். “அரிசிக்கு நாம் வழங்கிய கட்டுப்பாட்டு விலையை விட அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி வியாபாரிகளும் செயற்படுகின்றனர். இதை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள […]

இலங்கை

இலங்கையில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்க திட்டம்!

  • October 28, 2023
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில், அமைச்சின் செலவினத் தலையீடுகள் தோற்கடிக்கப்படுமாயின், வரவு செலவுத் திட்டம் முடிவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்பீடம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை இரண்டாம் வாசிப்பில் தோற்கடிக்காமல், வரவு செலவுத் திட்டக் குழுவின் போது அரசாங்கத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தயார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக […]

மத்திய கிழக்கு

காசா மக்களுக்கு ஆதரவாக தொடரும் போராட்டம்!

  • October 28, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஜோர்டானில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.  போராட்டம் தொடங்கும் முன், அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தலைநகர் அம்மான் முழுவதும் சிதறிக் கிடந்த மக்கள் ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜோர்டான் மக்கள் என்றும் பாலஸ்தீனியர்களுக்காக நிற்பார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் பாலஸ்தீனியர்களின் வெற்றியையே விரும்புவதாகவும் […]

இலங்கை

பிற்பகல் வேளையில் இலங்கையின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • October 28, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும்ட  பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களினால் […]

இலங்கை

இஸ்ரேலில் மரணமடைந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கட்டுநாயக்கா கொண்டுவரப்பட்டது!

  • October 28, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் மரணமடைந்த  அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது. சடலத்தை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (28.10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பராமரித்து வந்த திருமதி அனுலா […]