ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் 92 அகதிகள்

  • November 13, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 92 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மேலும், நீண்டகால காவலில் உள்ள மேலும் 340 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர். குடியேற்ற தடுப்பு உத்தரவு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி இந்த விலக்குகள் செய்யப்படும். தற்போதுள்ள குடியேற்ற தடுப்பு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புலம்பெயர்ந்தோரை காலவரையற்ற காவலில் வைத்திருப்பது புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்கு எதிரானது […]

பொழுதுபோக்கு

தீபாவளி வின்னர் யார் தெரியுமா? வசூலில் செம்ம மாஸ்….

  • November 13, 2023
  • 0 Comments

கார்த்தி சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இந்தாண்டு தீபாவளி வின்னர் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தீபாவளி தினமான நேற்று வசூலில் மரண மாஸ் காட்டியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். தீபாவளிக்கு ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கிடா, ரெய்டு ஆகிய படங்கள் திரையரங்குகளில் […]

இலங்கை

இலங்கையில் திடீர் மண்சரிவு – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்

  • November 13, 2023
  • 0 Comments

பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்றிரவு இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு பிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. மண்சரிவினால் பகுதியளவில் சேதமடைந்த இரண்டு வீடுகளிலிருந்த ஒன்பது பேர் அருகிலுள்ள தங்குமிடம் ஒன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த மண்சரிவில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Samsung ஸ்மார்ட்போனில் புதிய வசதி!

  • November 13, 2023
  • 0 Comments

Samsung நிறுவனம் அதன் புதிய திறன்பேசிகளில் உடனடி மொழிபெயர்ப்பு வசதியை இணைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டது அந்த வசதி. அதன்மூலம் தொலைபேசியில் உரையாடுவோரின் குரலும் தட்டச்சிடும் வார்த்தைகளும் நிகழ் நேரத்தில் மொழிபெயர்க்கப்படும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான Sub Title எனப்படும் துணை வாசகச் சேவையை அனுமதிப்பது, நிறுத்துவது போல் மிக எளிமையானதாகப் புதிய வசதி இருக்கும் என்றது Samsung. புதிய Galaxy வகைத் திறன்பேசிகளில் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அந்த வசதி அறிமுகமாகும். ஆனால் எத்தனை […]

விளையாட்டு

ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த ரோகித் சர்மா

  • November 13, 2023
  • 0 Comments

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 45-வது லீக் மற்றும் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை நடந்த போட்டியில் 8 போட்டிகளில் இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை, ஆனால் மறுபுறம் விளையாடும் நெதர்லாந்துக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானது ஏனெனில் […]

இலங்கை

ரணிலுக்கு நெருக்கடி – பசிலுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரபல அரசியல்வாதிகள்

  • November 13, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யோசனைகளை வருட வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்படாவிடின் அதற்கு ஆதரவளிப்பது குறித்து இருமுறை சிந்திக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தமது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் இதற்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் ஜனாதிபதி அதனைச் செய்யத் தவறியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனவே குறைந்தபட்சம் அந்தந்த […]

இலங்கை

இலங்கை பெற்றோர்களை குறி வைக்கும் மர்ம கும்பல் – பொலிஸார் விசேட எச்சரிக்கை

  • November 13, 2023
  • 0 Comments

பாடசாலை சென்ற பிள்ளைகள்விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெற்றோருக்கு அழைப்பேற்படுத்தி பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கும்பல், பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்ற அவசர சத்திரசிகிச்சை செய்வதற்குத் தேவையான பணத்தை உடனடியாக வரவு வைக்குமாறு கேட்பதோடு வங்கிக் கணக்கு எண்ணையும் வழங்குவார்கள் என தெரியவந்துள்ளது. சீதுவ உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். […]

ஐரோப்பா

பிரான்ஸில் பரவியது புதிய வைரஸ்!

  • November 13, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 1955ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது பிரான்ஸில் பரவியுள்ளது. காய்ச்சல், பசியின்மை, சுவாசக் கோளாறு, மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும் குறித்த வைரஸ், இறப்பைக்கூட ஏற்படுத்தக் கூடியது. அமெரிக்காவில் இருந்து இத்தாலி, ஸ்பெயின் வழியாக ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருவதாக ஐரோப்பிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தாம் 2022ம் ஆண்டில் இருந்து மிகவும் உண்ணிப்பாக அவதானித்து வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. காடுகளில் வாழும் மான்கள், ஆடுகளில் காணப்பட்ட வைரஸ் தொற்று. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

  • November 13, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் நிலையில் சட்டத்தை கடுமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க்படப்டுள்ளது. அதாவது இந்த வாகன விபத்துக்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களால் நிகழ்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமானது வெகுவிரைவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருப்பதற்கு சில நிபந்தனைகளை கட்டாயப்படுத்தவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் தமது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை தொடர்ந்து வைத்து இருப்பதாயின் […]

ஆசியா

சிங்கப்பூரில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மூட்டைப்பூச்சி

  • November 13, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மூட்டைப்பூச்சிப் பிரச்சினை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக் காலத்துக்குப் பிறகு வழக்கமாக இருப்பதைவிட இம்முறை 30 சதவீதம் அதிகரிக்கக்கூடும். பெரிய பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் அவ்வாறு முன்னுரைத்துள்ளன. அதிகமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதால், மூட்டைப்பூச்சிச் சம்பவங்கள் வழக்கத்துக்கு மாறாகக் கூடுதலாய்ப் பதிவாகியுள்ளன. ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் தென் கொரியாவிலும், மூட்டைப்பூச்சிப் பிரச்சினை பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இருண்ட பகுதிகள், மெத்தையின் மடிப்புகள், இதுபோன்ற இடங்களில் மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்கலாம். ஐரோப்பாவில் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு இவற்றைப் பற்றி […]