பொழுதுபோக்கு

அவ்வாறு மட்டும் நடந்தால் நிர்வாணமாக ஓடுவேன்… நடிகை வெளியிட்டுள்ள ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!

  • November 16, 2023
  • 0 Comments

‘உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்’ என நடிகை பகிரங்கமாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா மோத இருக்கிறது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி […]

இலங்கை

மாலைதீவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குடியரசு சதுக்கத்தில் நவம்பர் 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.          

பொழுதுபோக்கு

இணையத்தில் லீக்கானது கஜோலின் படு மோசமான வீடியோ… திரையுலகில் அடுத்த அதிர்ச்சி

  • November 16, 2023
  • 0 Comments

டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும் நிலையில், இணையதளம் முழுவதும் போலி செய்திகள் பெருகிக் கிடக்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. அண்மையில், சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பம், […]

இலங்கை

கடகுல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம்

  • November 16, 2023
  • 0 Comments

கால்வாய் ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நபரின் சடலம் தலத்துஓயா, கடகுல பகுதியில் நேற்று (15) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் வயது சுமார் 27 வயதுடையவர் என தலத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 12 ஆம் திகதி மாலை வீட்டை விட்டுச் சென்ற நிலையில், வீடு திரும்பாத நிலையில் 13 ஆம் திகதி உயிரிழந்தவரின் தாயார் தலத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி தலத்துஓயா […]

உலகம்

ரஷ்யாவில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்க பின்லாந்து எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை தடுக்க, ரஷ்யாவுடனான அதன் எல்லையில் உள்ள ஒன்பது குறுக்கு முனைகளில் நான்கை சனிக்கிழமை மூடும் என்று பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ தெரிவித்துள்ளார். பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, அமெரிக்காவுடனான பின்லாந்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு ரஷ்யாவின் பழிவாங்கலாகத் தோன்றுகிறது என்று பின்லாந்தின் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேட்டோ கூட்டணியில் இணைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடான பின்லாந்து, ரஷ்யாவுடன் 1,340-கிமீ (833-மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, […]

இலங்கை

இலங்கைக்கு வரவுள்ள மற்றுமொறு சீன ஆய்வு கப்பல்!

  • November 16, 2023
  • 0 Comments

இலங்கையின் விசேட பொருளாதாரவலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சிகப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. குறிப்பிட்ட கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா அதிகாரிகள் கோரியுள்ளனர். 2024 ஜனவரி 5ம் திகதி முதல் 20ம் திகதி வரை இந்த கப்பல் இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும். சீனாவின் இயற்கை வளங்களிற்கான அமைச்சிற்கு சொந்தமான கப்பலே இலங்கைக்கு […]

இலங்கை

இலங்கைக்கு தரமற்ற டீசல் இறக்குமதி?

  • November 16, 2023
  • 0 Comments

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி டீசல் தரமற்றது என ஆய்வக சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கப்பல் தரையிறங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த 19,000 மெட்ரிக் டன் டீசலில், 11,000 மெட்ரிக் டன் தரமற்றது என கண்டறியப்பட்டு, மீதமுள்ள டீசல் இரண்டு முறை தரப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கடந்த  கடந்த 5ஆம் திகதி இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் தொடர்பில் இந்த சிக்கல் எழுந்துள்ளது.

உலகம்

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள்: “கலப்பினப் போரின்” ஒரு பகுதி

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் 12வது பொருளாதாரத் தடைகள் மேற்கு நாடுகளால் நடத்தப்படும் “கலப்பினப் போரின்” ஒரு பகுதியாகும் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ரஷ்யாவிற்கு எதிரான முடிவில்லாத பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் வாஷிங்டனின் ‘பயனுள்ள முட்டாள்’ ஆகிவிட்டது” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறியுள்ளார். வாஷிங்டனின் “ரஷ்ய எதிர்ப்பு” கொள்கையில் அமெரிக்கா ஐரோப்பாவை ஒரு “தடியாக” பயன்படுத்துகிறது என்று ஜகரோவா கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய […]

பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ள சூர்யா!

  • November 16, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில், பிரபல பாலிவுட் ஹிட் படம் ஒன்றில் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என்றத் தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’, ‘வாடிவாசல்’ மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சூர்யா கவனம் செலுத்துவது அவரது ரசிகர்கள் உற்சாகப்படுத்தியுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டக் கதைகளான ‘ஜெய்பீம்’, ‘சூரரைப் போற்று’ படங்கள் […]

இலங்கை

யாழில் நூற்றாண்டுகால பழமையான மரம் முறிந்து விழுந்தது!

  • November 16, 2023
  • 0 Comments

யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக இன்று (16.11) முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை முன்னால் இருந்த குறித்த மரமானது வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதியோரமாக உள்ள மரங்கள் முறிந்து விழுகின்ற நிலையில் இது தொடர்பில் பொறுப்பு […]