2 நாட்களாக மீட்கப்படாத ஆண் சடலம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதைக் யாரும் கவனிக்காத அவலம்!
சென்னை வியாசர்பாடி அருகே வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ஆண் சடலம் இரண்டு நாட்களாக மீட்கப்படாமல் நீரில் மிதந்து வருவது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் 3 நாள்களாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் […]