ஆசியா

சிங்கப்பூரில் WhatsApp Web தளத்தைப் பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை!

  • December 6, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் WhatsApp Web தளத்தைப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால், அது அதிகாரத்துவ இணையப்பக்கம் தானா என்பதை உறுதி செய்யுமாறு அது வலியுறுத்தியது. WhatsApp Webஐப் பாவனை செய்யும் இணையப்பக்க மோசடிகள் குறித்து நினைவூட்டிய பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். போலிப் பக்கத்தில் வரும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது Whatsapp கணக்கு ஊடுருவப்படுகிறது. அந்தக் கணக்கின் மூலம் ஒருவரின் உற்றார் உறவினரை மோசடிக்காரர்கள் தொடர்புகொண்டு நிதியுதவி […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பாரிய ஆபத்தாக மாறியுள்ள AI – சான்ஸ்லர் வெளியிட்ட தகவல்

  • December 6, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அண்மைக்காலங்களாக செயற்கை நுண்ணறிவு அதாவது AI தொழில் நுட்பத்தின் மூலம் பல பிழையான தகவல்கள் இணையதளங்களின் ஊடாக பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பகிரப்படும் கருத்துக்களால் சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் ஜெர்மன் சான்ஸ்லர் ஓலா சொல்ஸ் அவர்களுடைய பேச்சு ஒன்று இணையதளங்களில் பரவி வருகின்றது. அதாவது ஜெர்மனுடைய சான்ஸ்லர் ஓலா சொல்ஸ் அவர்கள் AFD கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும், அரசாங்கத்துடைய கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார் என்றும் ஒரு இணைய தளத்தில் இவ்வகையான […]

ஐரோப்பா

பிரான்ஸில் கடும் குளிருக்கு மத்தியில் வீடின்றி தவிக்கும் மக்கள்

  • December 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வீதிகளிலும், பூங்காக்களிலும், மெற்றோ சுரங்கங்களிலும் படுத்து உறங்குபவர்களின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளதென தெரியவந்துள்ளது. பிரான்ஸில் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், தங்குமிடமற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் தற்போது 3,000 இற்கும் அதிகமானோர் வீதிகளில் படுத்து உறங்குகின்றனர். சென்ற ஆண்டை வித 16% சதவீதத்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகும். இவர்களில் 450 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7,572 பேர் இந்த குளிர் காலத்தில் தங்குமிட […]

இலங்கை

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

  • December 6, 2023
  • 0 Comments

இலங்கையில் வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் நட்டஈடுகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான சட்ட கட்டமைப்பை ஒரு மாத காலத்துக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இதற்கான விதிமுறைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வாகன விபத்தில் சிக்கிய தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே ஐந்து இலட்சம் ரூபா வரை நட்டஈடு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாகன விபத்தின் தன்மையைப் பொறுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் போதுமானதாக […]

இலங்கை செய்தி

புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்களுக்கு 8 வீத வட்டியில் கடன்

  • December 5, 2023
  • 0 Comments

  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மனிதநேயமிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்நோக்குக் கடன் திட்டம் நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அதற்காக வணிக வங்கிகளில் தனி அல்லது கூட்டு […]

இந்தியா செய்தி

ஜோஸ் ஆலுகாஸ் கடை கொள்ளை – நகைகள் மீட்பு : கோவை மாநகர கமிஷனர் பேட்டி

  • December 5, 2023
  • 0 Comments

கோவையில் நடந்த பிரபல நகைக்கடை கொள்ளை தொடர்பாக கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,கோவையில் 28ம் தேதி பிரபல நகைகடையில் கொள்ளை போனது.4.8 கிலோ தங்கம், பிளாட்டினம்,வைரம் நகைகள் கொள்கையடிக்கப்பட்டது. கொள்ளையன் விஜய் மீது இரு வழக்குகள் உள்ளன.விஜய் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. நேற்று விஜய் மாமியார் யோகராணி என்பவர் தும்பலஹள்ளியில் கைது செய்யபட்டார். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க,வைர நகைகள் […]

உலகம் செய்தி

12 மணி நேரத்தில் 59 மில்லியன் பார்வைகளைப் பெற்ற GTA 6 டிரெய்லர்

  • December 5, 2023
  • 0 Comments

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 இன் முதல் டிரெய்லரை ராக்ஸ்டார் கேம்ஸ் வெளியிட்டது. வெளியான 10 மணி நேரத்திற்குள், ட்ரெய்லர் 56 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. GTA உரிமையின் ஆறாவது கேம் பிளேஸ்டேஷன் 5, எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் உள்ளிட்ட பல்வேறு கன்சோல்களில் 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முந்தைய பதிப்பான GTA 5 ஒரு தசாப்தத்திற்கு முன்பு 2013 இல் வெளியிடப்பட்டது. நீண்ட காலமாக […]

இலங்கை செய்தி

கண்டியில் 100 இளைஞர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்

  • December 5, 2023
  • 0 Comments

சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்தும் செல்லும் பயணம் 100 இளைஞர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆதரவுடன் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட 100 இளைஞர்கள் அமைப்புக்கள் கண்டி தலதா மாளிகை தொடக்கம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வரை உள்ள சர்வமத தலைவர்களுக்கு சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நேற்று முன்தினம் கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி சிறீ நாட்ட தேவாலத்திற்கருகாமையில் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் பாவனையால் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • December 5, 2023
  • 0 Comments

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் , நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது , நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அது […]

இலங்கை செய்தி

இராணுவத்தில் உயர் பதவிக்கு வர பெண் இராணுவ அதிகாரிகளுக்கு வாய்ப்பு

  • December 5, 2023
  • 0 Comments

இராணுவத்தின் பெண் உத்தியோகத்தர்கள் இராணுவத்தின் உயர் பதவிக்கு செல்லும் வகையில் படை கட்டளைகள் புதுப்பிக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். பெண்கள் உயர் பதவிகளுக்கு செல்வதற்கான வழிமுறைகள் இருப்பதாகவும், ஆனால் சில இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாக இந்த வரைவு ஆயுதப்படை பெண் அதிகாரியை உயர் பதவிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.