தமிழ்நாடு

கடலூரில் 17 வயது மாணவன் வெட்டிக்கொலை… நண்பன் உட்பட நால்வர் கைது!

  • December 7, 2023
  • 0 Comments

ஸ்ரீமுஷ்ணம் அருகே, காதல் பிரச்சினையில் 17 வயது மாணவன் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட சம்பவத்தில் நண்பன் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூர் காலனியை சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மகன் கோகுலகிருஷ்ணன்(17). இவர், கடந்த 5ம் திகதி மாலை குறிஞ்சிக்குடி கிராமத்தில் உள்ள தரை கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸார், கோகுலகிருஷ்ணனின் சடலத்தை […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் தலைவரின் வீடு சுற்றிவளைப்பு; இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவல்

  • December 7, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் வீட்டை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ளனர் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ள அதேவேளை அவர் சுரங்கப்பாதைகளுக்குள் பதுங்கியிருக்கின்றார் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் தலைவரின் வீட்டை சுற்றிவளைத்துள்ளனர் அவரால் தப்பிச்செல்ல முடியும் ஆனால் நாங்கள் அவரை கைப்பற்றுவதற்கு வெகுநாட்கள் எடுக்காது என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அர்த்தம் ஹமாஸ் தலைவரை இஸ்ரேலிய படையினர் நெருங்கி விட்டனர் என்பதா என்ற கேள்விக்கு அவரது வீடு கான்யூனிஸ் பகுதியிலேயே […]

ஆப்பிரிக்கா

சீஷெல்ஸில் அவசரகாலநிலை பிரகடனம்!

  • December 7, 2023
  • 0 Comments

சீஷெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன் இன்று (07.12) அவசர நிலையை அறிவித்துள்ளார்.  அங்கு இடம்பெற்ற மிகப்பெரிய வெடிப்பு காரணமாக  குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பயணிக்கும் நபர்கள் மட்டுமே சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்று ராம்கல்வான் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மிக்க குறைந்த மக்கள் தொகை நாடுகளில் […]

இலங்கை

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்

  • December 7, 2023
  • 0 Comments

ஒரு கிலோவிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாத்தறை கல்ப என்வருடன் தொடர்புடைய இந்நாட்டு போதைப்பொருள் வர்த்தகத்திற்கு தலைமை தாங்கும் குடு தனு என்ற பெண்ணெ கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொடை குடா புத்கமுவ பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த பெண் கைதானார். 01 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் சிறுமி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, பலர் காயம்!

  • December 7, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் நகரில் உள்ள ஒரு பள்ளியில் இன்று (07.12) 14 வயது சிறுமி ஒருவர் சக மாணவரை சுட்டுக் கொன்று மேலும் ஐந்து குழந்தைகளைக் காயப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “முதற்கட்ட விசாரணை தரவுகளின்படி, 14 வயது சிறுமி ஒரு பம்ப்-ஆக்ஷன் துப்பாக்கியை பள்ளிக்கு கொண்டு வந்த நிலையில், அவர் தனது சக நண்பர்களை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமியின் நோக்கத்தை அறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கைது!

  • December 7, 2023
  • 0 Comments

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகளும், 21 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது படகுகளையும் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06.12) கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த  மீனவர்கள்  தலைமன்னாரம் ஜெட்டி மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னாரம் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் ஆய்வு அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட […]

இலங்கை

இலங்கை – பதுளையில் காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

  • December 7, 2023
  • 0 Comments

பதுளையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், மாணவி தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாயும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தனது 70 வயது பாட்டியுடன் அவர் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சுமார்  ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது 20 வயது காதலன் முச்சக்கரவண்டியில் வந்து பதுளை சருங்கல் கந்தவிற்கு […]

பொழுதுபோக்கு

‘விடுதலை 2’ திட்டமிட்டபடி திரைக்கு வருவதில் சிக்கல்?

  • December 7, 2023
  • 0 Comments

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் மீண்டும் துவங்கியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் இருவருக்குமான […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலியப் பெண்கள் கற்பழிப்பு தொடர்பில் சர்வதேச அமைப்புக்கள் மீது நேதன்யாகு கடும் கண்டனம்

  • December 7, 2023
  • 0 Comments

இஸ்ரேலியப் பெண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய கற்பழிப்புகள் மற்றும் பிற அட்டூழியங்கள் குறித்துப் பேசத் தவறியதற்காக , சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் ஐ.நா. மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பில் , இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியப் பெண்களை பலாத்காரம் செய்தபோதும், சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் பெண்கள் உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளான நீங்கள் எங்கு […]

இலங்கை

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

  • December 7, 2023
  • 0 Comments

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இந்த முறைமையின் மூலம் வெளிநாட்டு ஊழியர்களால் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் […]